நம்ம இந்திராணியை அடச்சு வச்சிருந்தாங்கல்ல.. அதே ஜெயில்லதான் ரியாவையும் வச்சிருக்காங்களாம்!
மும்பை: போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட ரியா சக்கரவர்த்தி மும்பையில் உள்ள பைகுல்லா பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த சிறையில் தான் ஷீனா போரா கொலை வழக்கு குற்றவாளியான இந்திராணி முகர்ஜியும் அடைக்கப்பட்டுள்ளார்.
போதை பொருள் பதுக்கி வைத்திருந்ததாக நடிகை ரியா சக்கரவர்த்தி பலகட்ட விசாரணைகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டார். அவரை பைகுல்லா சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதன் பேரில் அவர் நேற்றைய தினம் அந்த சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த சிறையில் சாதாரண அறையில் ரியா அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிறை துறை மருத்துவர் உடல் பரிசோதனை செய்தார். அவருக்கு தேவையான பொருட்கள் ஒரு சிறிய பாலித்தீன் கவரில் போட்டு கொடுக்கப்பட்டது.

கம்பளி
அந்த பையில் துணிகள், அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்டவை இருந்தன. இந்த சிறையில் 6 அறைகள் இருக்கும் ஒவ்வொரு அறையிலும் 40 முதல் 50 பேர் வரை அடைக்கப்படுவார்கள். சிறையில் அடைக்கப்பட்ட ரியாவுக்கு சிறிய தலையணை, வெள்ளை நிற பெட்ஷீட், கம்பளி ஆகியவை வழங்கப்படும்.

ரியாவுக்கு
தரையில்தான் படுக்க வேண்டும். ரியாவுக்கு தினமும் இரு சப்பாத்திகளும், ஒரு கப் சாதமும், பருப்பும், ஒரு காய்கறியும் வழங்கப்படும். சிறையில் ஒரு கேன்டீன் இருக்கிறது. இங்கு ரியா தனக்கு தேவையான பிஸ்கெட்டுகள் உள்ளிட்ட அன்றாட பயன்படுத்தப்படும் பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம்.

கொலை வழக்கு
இந்த சிறையில்தான் ஷீனா போரா கொலை வழக்கில் அடைக்கப்பட்டுள்ள இந்திராணி முகர்ஜி அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் இந்த சிறையில் இருந்து வரும் இந்திராணி, புதிதாக சிறைக்கு வருவோரை சந்தித்து பேசுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

ஜாமீன்
அந்த வகையில் அவர் ரியாவை சந்திப்பார் என தெரிகிறது. தன்னுடன் சிறையில் இருந்த மஞ்சுளா ஷேத் இறந்தவுடன் சிறையில் இந்திராணி போராட்டம் நடத்தினார். இந்த சிறையில் மொத்தம் 250 பெண் கைதிகள் உள்ளனர். விசாரணையின் போது ரியாவுடன் ஒரு பெண் காவலர் கூட இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவரது ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications