மகாராஷ்டிரா: பண்டாரா மாவட்ட அரசு மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து - 10 குழந்தைகள் பலி
மகாராஷ்டிரா மாநிலம் பண்டாரா மாவட்ட அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் பண்டாரா மாவட்ட அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். 7 குழந்தைகள் படுகாயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டனர்.
அங்குள்ள பச்சிளம் குழந்தைகள் அவசர சிகிச்சை பிரிவில் நள்ளிரவு 2 மணிக்கு இந்த தீ விபத்து நிகழ்ந்துள்ளது. தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர் என்றாலும் 10 குழந்தைகள் உயிரோடு கருகினர்.
தீ விபத்து நேரிட்டதற்கான காரணம் பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது. மருத்துவர்களும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் தீ விபத்து நிகழ்ந்த இடத்தில் ஆய்வு செய்து வருகின்றனர்.
Ten children died in a fire that broke out at Sick Newborn Care Unit (SNCU) of Bhandara District General Hospital at 2 am today. Seven children were rescued from the unit: Pramod Khandate, Civil Surgeon, Bhandara, Maharashtra pic.twitter.com/bTokrNQ28t
— ANI (@ANI) January 9, 2021
அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை பிரிவில் ஏற்பட்ட தீ விபத்து மகாராஷ்டிராவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.