''எங்கள் உறவு முறிந்து விட்டதாக யார் சொன்னது?''.. பிரதமர் மோடியை சந்தித்தபின் உத்தவ் தாக்கரே பேட்டி!

Subscribe to Oneindia Tamil

மும்பை: அரசியல்ரீதியாக எங்கள் உறவு இணக்கம் இல்லாமல் இருந்தாலும், எங்கள் உறவு முடிந்து விடவில்லை என்று பிரதமர் மோடியை சந்தித்தபின் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே கூறினார்.

பா.ஜ.கவும், சிவசேனாவும் மகாராஷ்டிராவில் நட்புக்குரிய கட்சிகளாக வலம் வந்தன. ஆனால் 2019 சட்டசபை தேர்தலுக்கு பிறகு எல்லாம் மாறி விட்டது.

2019 சட்டசபை தேர்தலில் பாஜகவும்-சிவசேனாவும் கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க முடிவு செய்தன. ஆனால் தங்களுக்கு சுழற்சி முறையில் முதல்வர் பதவி வழங்க வேண்டும் என்று சிவசேனா கேட்டது.

 சிவசேனா- பாஜக மோதல்

சிவசேனா- பாஜக மோதல்

இதற்கு பாஜக மறுப்பு தெரிவித்ததால் இந்த கூட்டணி முறிந்தது. தேசியவாத காங்கிரஸ், காங்கிரசுடன் கூட்டணி அமைத்து சிவசேனா ஆட்சியை பிடித்தது. சிவசேனா தலைவர் தாக்கரே முதல்வராக உள்ளார். தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் துணை முதல்வராக உள்ளார். கூட்டணியில் இருந்து விலகியது முதல் சிவசேனா, பாஜகவை வறுத்தெடுத்து வருகிறது.

பிரதமருடன் சந்திப்பு

பிரதமருடன் சந்திப்பு

மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களையும், பிரதமர் மோடியையும் சிவசேனா விமர்சித்து வருகின்றன. இந்த நிலையில் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே தலைநகர் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்தார். துணை முதல்வர் அஜித் பவார், முன்னாள் முதல்வர் அசோக் சவாண் ஆகியோர் உடன் சென்றனர். நீண்ட நாட்களுக்கு பிறகு உத்தவ் தாக்கரே பிரதமரை சந்தித்து இருப்பதால் பல்வேறு கருத்துக்கள் உலா வந்தன.

Recommended Video

    பிரதமர் Modi சொன்ன மூக்கில் செலுத்தும் Nasal Vaccine எப்படி செயல்படும்? முழு தகவல்
    மராத்தா இடஒதுக்கீடு

    மராத்தா இடஒதுக்கீடு

    மகாராஷ்டிரா அரசு கொண்டு வந்த மராத்தா மக்களுக்கு, கல்வி, வேலைவாய்ப்புகளில் 16 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. எனவே மராத்தா மற்றும் ஓபிசி இட ஒதுக்கீடு, டவ் தே புயல் நிவாரண நடவடிக்கைகள் குறித்து உத்தவ் தாக்கரே பிரதமர் மோடியிடம் ஆலோசனை நடத்தி உள்ளார் என்று கூறப்படுகிறது.

    உறவு முடிந்து விடவில்லை

    உறவு முடிந்து விடவில்லை

    பிரதமர் மோடியை சந்தித்த பிறகு நிருபர்களிடம் பேசிய உத்தவ் தாக்கரே, ''நான் மராத்தா இடஒதுக்கீடு பிரச்சினை, புயல் குறித்து பிரதரிடம் பேசினேன். அரசியல்ரீதியாக எங்கள் உறவு இணக்கம் இல்லாமல் இருக்கலாம். அதற்காக எங்களது உறவு முறிந்து விட்டது என்பது அர்த்தமா? நான் ஒன்றும் நவாஸ் ஷெரிப்பை சந்திக்க போகவில்லையே. பிரதமர் மோடியைத்தானே சந்தித்தேன். இதில் ஒன்றும் தவறு இல்லை'' என்று கூறினார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+