Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இளைஞர்களுக்கு கல்யாணத்துக்கு பொண்ணு கிடைக்கல.. பாஜக ஆட்சியில் ரொம்ப மோசம்.. சரத் பவார் கவலை!

Subscribe to Oneindia Tamil

மும்பை : நாட்டில் வேலையின்மை அதிகரித்து வருவதால் இளைஞர்களுக்கு வேலையும் கிடைக்கவில்லை, திருமணத்திற்கு பெண்ணும் கிடைக்கவில்லை, அதனால் அவர்கள் திருமணம் செய்து கொள்ள முடியாமல் உள்ளனர், நாட்டில் படித்த இளைஞர்கள் வேலைக்காக காத்திருக்கும் போது பாஜக இரு மதங்களுக்கு இடையே வெறுப்பை தூண்டி அரசியல் செய்கிறது என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மத்திய பாஜக அரசை விமர்சித்துள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜன் ஜகர் யாத்ரா என்ற நடைபயணத்தை தொடங்கி வைத்து உரையாற்றினார். அப்போது நாட்டில் நிலவும் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் போன்ற பிரச்சனைகளுக்கு பாஜக அரசு தான் பொறுப்பு என குற்றம்சாட்டினார்.

மேலும், மதம், சாதி பெயரில் இரு சமூகத்தினருக்கு இடையே சண்டையை மூட்டி விடுகிறது மத்திய பாஜக அரசு என்றும் சரத் பவார் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சரத் பவார்

சரத் பவார்

கடந்த 2 நாட்களுக்கு முன் மகாராஷ்டிரா சென்ற பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, வரும் 2024 மக்களவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு 'மகாராஷ்டிரா மிஷன் 45' என்ற கோஷத்தை முன்வைத்து பிரசாரத்தை தொடங்கினார். இந்நிலையில் மகாராஷ்டிராவில் ஜன் ஜகர் யாத்ராவை தொடங்கி வைத்துப் பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், பாஜக ஆட்சியில் நாட்டில் வேலையின்மை அதிகரித்து வருவதால் இளைஞர்களுக்கு பெண் கிடைக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.

நட்டாவுக்கு நினைவிருக்கட்டும்

நட்டாவுக்கு நினைவிருக்கட்டும்

சரத் பவார் பேசுகையில், "மகாராஷ்டிராவில் 48 மக்களவை தொகுதிகள் உள்ளன. ஆனால் பாஜக மிஷன் 45 என்று கோஷங்களை எழுப்புகிறது. ஜேபி நட்டாவின் சொந்த மாநிலமான இமாச்சல பிரதேசத்தில், பாஜக தோற்றதை அவருக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். நாட்டின் வேலையின்மை பிரச்சனை அதிகரித்துள்ளதால், அது சமூகப் பிரச்சனையாக உருவாகிறது. இன்றைய இளைஞர்கள் படித்தவர்கள். அவர்களுக்கு வேலை கேட்கும் உரிமை உள்ளது.

இளைஞர்களிடம் விசாரித்தேன்

இளைஞர்களிடம் விசாரித்தேன்

சுற்றுப் பயணங்களின்போது கிராமங்களை பார்வையிடுவது எனது வழக்கம். ஒருமுறை பயணத்தின் போது ஒரு கிராமத்திற்குச் சென்று இருந்தேன். அப்போது 25 முதல் 30 வயது வரை உள்ள இளைஞர்கள் 15-20 வேலைக்குச் செல்லாமல் அரட்டையடித்துக் கொண்டிருந்தனர். அவர்களிடம் பேசினேன். அவர்களில் பலர் பட்டதாரிகள், சிலர் முதுநிலை பட்டதாரிகள். ஆனால் அவர்கள் யாருக்கும் வேலை கிடைக்கவில்லை. வேலை இல்லாததால் திருமணத்திற்குப் பெண் கிடைக்கவில்லை என கூறினர். இது அந்த கிராமத்தில் மட்டுமல்ல, எல்லா மாநிலங்களிலும் இதே நிலைதான்.

 பிளவை உண்டாக்கும் பாஜக

பிளவை உண்டாக்கும் பாஜக

வேலை கிடைக்காததால், பல இளைஞர்கள் திருமணம் செய்து கொள்ள முடியாமல் தவிக்கின்றனர். வேலையில்லாத நபர்களுக்கு பெண் கொடுக்க யாரும் தயாராக இல்லை. அவர்களுக்கு வேலை கொடுப்பது, சுய தொழிலுக்கு ஊக்குவிப்பது என்று இந்த பாஜக அரசு செயல்படாமல் மதம், சாதி என்ற பெயரில் சமூகங்களுக்கிடையில் பிளவை உருவாக்கி வருகிறது. நாட்டின் பணவீக்கம் மற்றும் வேலையின்மை போன்ற உண்மையான பிரச்சனைகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்புகிறது.

வெறுப்பு அரசியல்

வெறுப்பு அரசியல்

மகாராஷ்டிராவை தொழில் நிறுவனங்கள் வெளியேறுகின்றன. தற்போதுள்ள தொழிற்சாலைகளுக்கு எந்த ஊக்கத்தொகையும் வழங்கப்படவில்லை. வேலையின்மை அதிகரித்து வரும் நிலையில், புதிய தொழிற்சாலைகளையும் உருவாக்கவில்லை. தேர்தல் நேரத்தில் வேலைவாய்ப்பை உருவாக்குவதாக வாக்குறுதி வழங்கிவிட்டு அதை நிறைவேற்ற முடியாமல் இவ்வாறு பாஜக வெறுப்பு அரசியலை செய்து வருகிறது" என விமர்சித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+