பப்பம்மை போடச் சொன்னது தாமரை.. ஹேமலதா போட்டது கை.. குமரியில் வெடித்த போராட்டம்!
Recommended Video
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் சந்தையடி வாக்குச் சாவடியில் பாட்டி சொன்ன சின்னத்திற்கு வாக்களிக்காமல் வேறு சின்னத்திற்கு தேர்தல் அலுவலர் வாக்களித்ததாக கூறி பாஜகவினர் பெரும் போராட்டத்தில் குதித்தனர்.
கன்னியாகுமரி அருகே சந்தையடி அரசு தொடக்கப்பள்ளியில் வாக்குச்சாவடி எண் 271ல் ஹேமலதா என்ற தேர்தல் தலைமை வாக்குச்சாவடி அலுவலர் தலைமையில் தேர்தல் நடைபெற்றது. மாலையில் அந்த பகுதியைச் சேர்ந்த கண் தெரியாத பப்பம்மை என்ற மூதாட்டி தன் மகனுடன் ஓட்டு போட வந்தார்.

அப்போது அங்கு நின்ற தலைமை அலுவலர் ஹேமலதா மூதாட்டிக்கு தான் ஓட்டு போட உதவி செய்வதாக அழைத்துச் சென்றுள்ளார். அப்போது பப்பம்மை தாமரை சின்னத்திற்கு வாக்கு போட சொன்னதாகவும் ஆனால் தலைமை அலுவலர் கை சின்னத்தில் ஓட்டு போட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அந்த அலுவலர் மீது நடவடிக்கை எடுத்து அந்த வாக்குச்சாவடியில் மறுதேர்தல் நடத்த கோரி 200க்கும் மேற்பட்ட பாஜகவினர் மற்றும் ஆதிமுகவினர் அங்கு கூடி வாக்கு இயந்திரத்தை அங்கிருந்து கொண்டு செல்லவிடாமல் பஸ் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கன்னியாகுமரி டிஎஸ்பி பாஸ்கரன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலிசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதன் பின்னர் போராட்டக்காரர்கள் அலுவலர் மீது நடத்தக் கோரியும் மறுதேர்தல் நடத்தக் கோரியும் மண்டல தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு ஒன்றை கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர். இந்த பஸ் போராட்டத்தால் சுமார் 3 மணி நேரமாக இந்த பகுதியில் போக்குவரத்து தடைபட்டது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications