புலனாய்வுக்கான மத்திய அரசு விருது பெற்ற.. பெண் இன்ஸ்பெக்டர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
நாகர்கோவில்: சிறந்த புலனாய்வுக்காக மத்திய அரசின் விருது பெற்ற போலீஸ் பெண் இன்ஸ்பெக்டரின் நாகர்கோவில் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருப்பவர் கண்மணி. இவரது கணவர் சேவியர் பாண்டியன். அரசு வழக்கறிஞர். இவர் நீதித் துறையின் குற்றவியல் பிரிவு உதவி இயக்குனராக செயல்பபட்டு வருகிறார். இந்த தம்பதி நாகர்கோவில் கீழ ராமன்புதூர் பகுதியில் வசித்து வருகின்றனர். இவர்கள் அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கும் புகார் சென்றது. அதுதொடர்பான விவரங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் ரகசியமாக சேகரித்து வந்தனர். இந்நிலையில் இன்று காலை திடீரென்று நாகர்கோயில் லஞ்ச ஒழிப்பு துறை துணை கண்காணிப்பாளர் பீட்டர் ஜெரால்ட் தலைமையிலான அதிகாரிகள் அவரது வீட்டில் அதிரடி சோதனையிட்டனர். பீரோ உள்பட வீட்டின் அனைத்து பகுதிகளிலும் அங்குலம் அங்குலமாக சோதனை மேற்கொண்டனர். அப்போது, தங்கநகைகள், லட்சக்கணக்கில் ரொக்கப் பணம், பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது .
போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்மணி சில ஆண்டுகள் நாகர்கோயிலில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக இன்ஸ்பெக்டராகவும் பணியாற்றினார். 2001ஆம் ஆண்டின் சிறந்த புலனாய்வு அதிகாரியாக மத்திய அரசால், தேர்வு செய்யப்பட்டு விருது வாங்கினார். தற்போது இவரது வீட்டிலேயே லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை நடத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications