‘சங்கி பிரின்ஸ்’ கைது.. அதிகாலையில் பாஜக நிர்வாகி பிரவீன்ராஜை தட்டித் தூக்கிய சைபர் கிரைம் போலீசார்!
நாமக்கல்: X சமூக வலைதளத்தில் 'சங்கி பிரின்ஸ்' என்ற பெயரில் இயங்கி வந்த பாஜக நிர்வாகி பிரவீன் ராஜ் இன்று அதிகாலையில், சைபர் கிரைம் போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அவரது சகோதரி பிரியங்கா காந்தி குறித்து இழிவுபடுத்தும் வகையில் கருத்து பதிவிட்டதாக கரூர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் அளிக்கப்பட்ட புகாரில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த பாஜக நிர்வாகி பிரவீன் ராஜ் சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாஜகவின் இளைஞரணியின் மாநில செயற்குழு உறுப்பினராகவும், இளைஞரணியின் சமூக ஊடக பொறுப்பாளராகவும் செயல்பட்டு வரும் பிரவீன் ராஜ், கரூர் சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக கரூருக்கு அழைத்துச் செல்லப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாஜக நிர்வாகி பிரவீன் ராஜின் கைது நடவடிக்கையை பாஜகவினர் கடுமையாக விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர். திமுக அரசு, சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பல விஷயங்களில் தோல்வி அடைந்ததை மறைக்கவே திமுக அரசை விமர்சிக்கும் பிரவீன் ராஜை கைது செய்துள்ளனர் என பாஜகவினர் விமர்சித்துள்ளனர்.
கைது நடவடிக்கை தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரவீன் ராஜ், "அதிகாலை 2 மணிக்கு கதவை தட்டி, பிறகு கதவை உடைக்க முற்படும் சிலர், கேட்டால் சைபர் கிரைம் என்கிறார்கள். ஆனால் தாங்கள் காண்பிக்கும் ஐடி கார்டை உள்ளூர் மக்கள் ஃபோட்டோ எடுப்பது குற்றம் என சொல்லி மிரட்டுகிறார்கள். புரோட்டோகால் படி உள்ளூர் போலீஸும் உடன் இல்லை. வீழ்வேன் என நினைத்தாயோ?" எனத் தெரிவித்துள்ளார்.
-
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி? -
ப்ளீஸ் 2 தொகுதிகளை மாத்திக்கலாம்.. அதிமுகவிடம் கேட்க பாஜக திட்டம்.. வெளியான பரபரப்பு தகவல் -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
"தமிழகத்தில் பாஜக வளரவில்லை".. அதிமுக தான் எங்கள் பலம்.. மேடையிலேயே தோல்வியை ஒப்புக்கொண்ட அமித்ஷா! -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
எஸ்ஐ கவிதா ஜெயிலுக்குள்ளேயே செய்த காரியம்.. அந்த செல்போனை பார்த்தால்? அதிர்ச்சியில் காவல் துறை -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை!












Click it and Unblock the Notifications