பேய் ஓட்டுவதாக பெண்களை சாட்டையால் அடித்து, கன்னத்தில் அறைந்த போலி சாமியார்.. மிரண்டு போன நாமக்கல்
நாமக்கல்: நாமக்கல் அருகே பேய் ஓட்டுவதாக கூறி பெண்களை சாட்டையால் அடித்து, கன்னத்தில் அறைந்து , காலால் எட்டி உதைத்த போலி சாமியார் அணில் குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாமக்கல் அருகே பொம்மன் பட்டி கம்மாள மேடு என்ற இடத்தில் காதப்பள்ளியைச் சேர்ந்த சீரங்கன் மகன் அணில் குமார் என்பவர் கருப்பண்ண சுவாமி கோவிலை அமைத்து நடத்தி வருகிறார்.
கருப்பண்ண சுவாமி கோவிலுக்கு வரும் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு குறி சொல்லி வந்துள்ளார். அவரிடம் குறி கேட்க பலரும் தினமும் வந்து சென்றுள்ளனர்.

பேய் ஓட்டுவது
அத்துடன் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் தான், பில்லி சூனியம் போக்குவது, பேய் விரட்டுவது போன்றவையும் செய்வேன் என்று கூறியுள்ளார். மக்கள் இவரை உடல் நலம் பாதிக்கப்பட்ட பெண்களை கோவிலுக்கு கூட்டி வந்துள்ளார்கள்.

கொடூரமான செயல்கள்
இந்நிலையில் கோவிலுக்கு பெண்களை பேய்களை ஓட்டுவதாக கூறி சாட்டையால் தாக்கி வந்துள்ளார். அத்துடன் பிரம்பு குச்சியால் தாக்குவது, காலால் உதைப்பது, கன்னத்தில் அறைவது போன்ற கொடூரமான செயல்களை செய்து வந்துள்ளார்.

வெளியான வீடியோ
இந்நிலையில் அணில் குமார். பெண்களுக்கு பேய் ஓட்டுவதை வீடியோ பதிவு செய்ய மற்றும் யூட்யூபில் வெளியிடுவதற்கு புது சத்திரம் சேர்ந்த முருகேசன் என்பவரை உதவி நாடி உள்ளார். அவர் எடுத்த வீடியோவை வாட்ஸ்அப் ஃபேஸ்புக் யூட்யூபில் ஆகியவற்றில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோக்கள் சாமியாருக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

காலால் உதைத்தார்
அதில் பேய் விரட்டுவதாக கூறி பெண்கள் சிலரை கன்னத்தில் அறைவது, பிரம்பால் அடிப்பது, காலால் உதைப்பது, மது அருந்திவிட்டு அடிப்பது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. பலரும் அணில் குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொதித்தனர்.

போலீசார் விசாரணை
சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், காதப்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில் வேல கவுண்டம்பட்டி காவல்துறையினர் போலி சாமியார் அனல் குமார் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications