நாமக்கல் அருகே நீட் தேர்வு எழுதிய மாணவி திடீர் மாயம்.. தீவிரமாக தேடும் போலீஸ்
நாமக்கல்: நாமக்கல் அருகே நீட் தேர்வு எழுதிய மாணவி ஸ்வேதா திடீரென மாயமானது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு மாணவர்களிடம் மிகப் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாணவி அனிதா தொடங்கி ஆண்டுதோறும் நீட் தேர்வு அச்சத்தால் மாணவர்கள் மரணம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

மாணவர் தற்கொலைகள்
இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு முன்னதாக சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே தனுஷ் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டார். அரியலூர் அருகே சாத்தம்பாடி கிராமத்தைச் சேர்ந்த கருணாநிதியின் மகள் கனிமொழி, நீட் தேர்வு எழுதிய பின்னர் தோல்வி அடைந்துவிடுவோமே என்ற அச்சத்தில் தற்கொலை செய்து கொண்டார். வேலூரில் செளந்தர்யா என்ற மாணவியும் தற்கொலை செய்து கொண்டார். செங்கல்பட்டில் நீட் தேர்வில் தோற்றுவிடுவோம் என அஞ்சிய மாணவி தற்கொலைக்கு முயன்றார். இப்படி ஒவ்வொருநாளும் நீட் தேர்வு தொடர்பான மரணங்கள் நெஞ்சை உலுக்குகின்றன.

மாணவி மாயம்
இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே 2-வது முறையாக நீட் தேர்வெழுதினார் மாணவி ஸ்வேதா. இந்த நிலையில் நேற்று காலை முதல் ஸ்வேதா வீட்டில் இல்லை. அவரது அக்கம் பக்கத்தில் பெற்றோர்களும் உறவினர்களும் தேடினர். ஆனால் ஸ்வேதா கிடைக்காத நிலையில் போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்
ஏற்கனவே நீட் தேர்வால் மாணவர்கள் அச்சமடைந்து தற்கொலை செய்து கொள்ள கூடாது என முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்து வீடியோ வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில், மாணவச் செல்வங்களே! மனம்தளராதீர்கள்! கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்; ஈடில்லா உயிர்களை மாய்த்துக் கொள்ளாதீர்கள்! கல் நெஞ்சங்கொண்டோரைக் கரைப்போம்! NEET எனும் அநீதியை ஒழிக்கும்வரை நாம் ஓயமாட்டோம் என கூறியிருந்தார்.

நடிகர் சூர்யா வேண்டுகோள்
அதேபோல் நடிகர் சூர்யாவும் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில், மாணவ மாணவிகள் அனைவரும் வாழ்க்கையில் அச்சம் இல்லாமல் இருக்க வேண்டும். ஒரு தேர்வு உங்களுடைய உயிரைவிட பெரியது அல்ல. உங்களுக்கு மனம் கஷ்டமாக இருக்கிறது என்றால் உங்களுக்கு பிடித்தவர்கள், பெற்றோர்கள், நண்பர்கள் என யாரிடமாவது மனம் விட்டுப் பேசுங்கள். பயம், கவலை, விரக்தி, வேதனை அனைத்தும் கொஞ்ச நேரத்தில் மறைந்து விடக் கூடிய விஷயங்கள். தற்கொலை என்பது உங்களை நேசிப்பவர்களுக்கு உங்கள் பெற்றோர்களுக்கும் நீங்கள் கொடுக்கும் வாழ்நாள் தண்டனை. நம்பிக்கை தைரியத்துடன் இருந்தால் வெற்றி நிச்சயம் என கூறியிருந்தார்.

16 பேர் தற்கொலை
தமிழகத்தில் நீட் தேர்வால் 4 ஆண்டுகளில் இதுவரை மொத்தம் 16 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். மேலும் நீட் தேர்வில் மனநலம் சார்த்த ஆலோசனை பெறுவதற்கு 104 என்ற இலவச தொலைபேசி எண்ணை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. அதேபோல் மாணவர்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்கவும் தமிழக அரசு ஏற்பாடுகள் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்!












Click it and Unblock the Notifications