1000 கல்லறைகளுக்கு ஒருவர்! உலகின் அமைதியான நகரம் இதுதான்! உயிரோடு இருப்பவர்களைவிட இறந்தவர்கள் அதிகம்
நியூயார்க்: உலகம் முழுவதும் பல விசித்திரமான இடங்கள் உள்ளன. மனிதன் கண்டுபிடிக்க வேண்டியவை இன்னும் நிறைய உள்ளது என்று கூட சொல்லலாம்.
ஆனால் ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்ட சில இடங்கள் திகிலூட்டுவதாக இருக்கிறது. அதில் ஒன்றுதான் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள அமைதியின் நகரம்.
உயிருடன் இருப்பவர்களை விட உயிரிழந்தவர்கள் அதிகம் உள்ள நகரம் இது மட்டும்தான். இங்கு சுமார் 1000 பிணங்களுக்கு ஒருவர் என்கிற வகையில் மக்கள் தொகை இருக்கிறது.

விசித்திரம்
பல வகையான நகரங்கள் உலகம் முழுவதும் இருக்கின்றன. உயரமான நகரம், நீர் சூழ்ந்த நகரம், வெப்பம் மிகுந்த நகரம், மிகவும் குளிர்ச்சியான நகரம் என பல நகரங்கள் இருக்கின்றன. ஆனால் அமைதியின் நகரம் என ஒன்று இருக்கிறது. இது குறித்து நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இப்படியொரு நகரம் அமெரிக்காவின் கலிபோர்னியாவுக்கு அருகில்தான் அமைந்திருக்கிறது. சரி இந்த நகரம் அமைதியானது என எப்படி சொல்கிறீர்கள் என கேட்கிறீர்களா? இந்த கட்டுரையின் முடிவில் நீங்களே அத ஒப்புக்கொள்வீர்கள்.

1920களுக்கு பிறகு
கோல்மா என்று அழைக்கப்படும் இந்த நகரம் 1900க்கு முன் வரை சாதாரண பகுதியாகதான் இருந்துள்ளது. ஆனால், 1920லிருந்து 1941 வரை இப்பகுதியில் நடைபெற்ற மாற்றங்கள்தான் இந்த நகரத்திற்கு 'அமைதியின் நகரம்' என்கிற பெயர் வர காரணமாக அமைந்தது. அதாவது, இந்த காலகட்டங்களில், சான் பிரான்சிஸ்கோவில் அடக்கம் செய்யப்பட்டிருந்த உடல்களை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று அப்போதைய அரசு உத்தரவிட்டிருந்தது.

மறுகட்டமைப்பு
இதனையடுத்து எல்லா உடல்களும் கோல்மா நகர் நோக்கி கொண்டுவரப்பட்டு இங்கு அடக்கம் செய்யப்பட்டன. இதற்காக தலா 10 டாலர் வசூலிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இவ்வாறு கொண்டு வரப்பட்ட சவங்களின் எண்ணிக்கை சுமார் 1.5 மில்லியனாகும். இதனையடுத்துதான் சான் பிரான்சிஸ்கோ மறு கட்டமைப்பு செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. தற்போது கோல்மா 15 லட்சம் கல்லறைகளுடன் இருக்கிறது. ஆனால் மக்கள் தொகையோ வெறும் 1,507தான்.

அமைதியின் நகரம்
கிறித்தவ மத்தின்படி உயிரிழந்தவர்களை புதைப்பதுதான் வழக்கம். எனவே உயிரிழந்தவர்களை புதைப்பதற்கான இடுகாடுகளின் அளவுகள் இந்த பகுதியில் நாள்தோறும் குறைந்துகொண்டே வருகிறது. தற்போது கோல்மா நகரத்தில் 1000 கல்லறைகளுக்கு ஒருவர் என வாழ்ந்து வருகின்றனர். இப்போது சொல்லுங்கள் இந்த நகரம் அமைதியின் நகரம் தானே?
-
அமெரிக்காவில் ஹைதராபாத் இளைஞர் ஜாலி சுற்றுலா.. 3 பேரை காப்பாற்றியவருக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications