வேற லெவல்! கலக்கும் நித்தியானந்தா! கைலாசாவை அங்கீகரித்தது அமெரிக்கா! புதிய ஒப்பந்தமும் கையெழுத்தானது
நியூயார்க்: கைலாசா குறித்து தொடர் அறிவிப்புகளை வெளியிட்டு வந்த சர்ச்சை சாமியார் நித்தியானந்தா, தற்போது கைலாசா-அமெரிக்கா இடையே இருதரப்பு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக கூறியுள்ளார். இதன் மூலம் அமெரிக்கா கைலாசாவை அங்கீகரித்துள்ளது.
இந்த ஒப்பந்தம் அமெரிக்காவின் நீயூ ஜெர்சியில் உள்ள நெவார்க் நகர மண்டபத்தில் நடைபெற்றுள்ளது. அமெரிக்காவின் மரபுபடி அந்நாட்டுடன் வேறு ஒரு நாடு ஒப்பந்தம் மேற்கொள்கிறது எனில் அந்நாட்டின் தேசிய கொடி ஏற்றப்பட்டு, தேசிய கீதம் பாடப்படும். அந்த வகையில் நெவார்க் நகர மண்டபத்தில் கைலாசாவின் கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் பாடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் திருவண்ணாமலையை சேர்ந்த நித்தியானந்தா சிறுவயது முதல் ஆன்மீகத்தில் கொண்ட நாட்டம் காரணமாக பிரபலமான சாமியாராக உருவானார். இந்நிலையில் தமிழ்நாட்டின் மிக பழமையான சைவ மடாலயங்களில் ஒன்றான மதுரை ஆதீன மடத்தின் இளைய பீடாதிபதியாக கடந்த 2012ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். ஆனால் இவருக்கு முன்பிருந்தே பலர் இறைப்பணியாற்றி வந்திருந்த நிலையில் இவரை இளைய பீடாதிபதியாக அறிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

வழக்கு
இதனையடுத்து இந்த அறிவிப்பை ஆதீனத்தின் 292வது மடாதிபதியான ஸ்ரீ அருணகிரிநாதர் திரும்ப பெற்றுக்கொண்டார். அதிலிருந்து பஞ்சாயத்து கொஞ்சம் கொஞ்சமாக தொடங்கியது. இளைய பீடாதிபதி குறித்த அறிவிப்பை வாபஸ் பெற்ற அருணகிரிநாதர், அதே ஆண்டில் திருவாவடுதுறை ஆதீனத்தின் மூத்த தம்பிரான் சுந்தர மூர்த்தி சுவாமிகளை இளைய ஆதினமாக அறிவித்தார். இதனையடுத்து நித்தியானந்தா மதுரை மடத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது. இதன் பின்னர் நடிகையுடன் இவர் தனிமையில் இருந்த வீடியோ வெளியானது இவர் மீது கூடுதல் கவனத்தை ஏற்படுத்தியது. மட்டுமல்லாது ஆள் கடத்தல் உள்ளிட்ட வழக்கும் இவர் மேல் நிலுவையில் உள்ளது.

கைலாசா
இவ்வாறு இருக்கும் நிலையில், கடந்த சில ஆண்டுகளாக பக்தர்களுக்கு நேரில் காட்சியளிக்காமல் ஆன்லைன் வழியாகவே சத்சங்கம் மேற்கொண்டு வந்திருந்தார். இதனையடுத்து கைலசா எனும் புதிய நாட்டை வாங்கி விட்டதாகவும் இது இந்துக்களின் புனித பூமியாக இருக்கும் எனவும் கூறி திடீர் பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால் இதனை பலரும் நம்பவில்லை. நம்பியவர்கள் இந்நாடு எங்கு இருக்கிறது என்று கேட்க தொடங்கினர். பல நாட்கள் இது குறித்த மர்மம் நீடித்து வந்த நிலையில், அவர் தனி நாடு கோரி ஐநாவில் விண்ணப்பித்ததாகவும் செய்திகள் வெளியாகின.

ஒப்பந்தம்
அவர் தென் பசிபிக் கடல் பகுதியையொட்டியுள்ள ஒரு தீவில் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் சிலர் இவர் கரீபியன் கடலில் உள்ள தீவுகளில் இருக்கிறார் என்றும் கூறுகிறார்கள். இந்நிலையில்தான் அமெரிக்காவின் நெவார்க் நகரத்துடன் கைலாசா சார்பில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி தொற்றுநோய், சிக்கலான மனநலப் பிரச்சனைகள், வன்முறை, வறுமை, கல்வியறிவின்மை மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றின் மூலம் ஏற்படும் பாதிப்புகளை இரு நகரங்களும் சேர்ந்து தீர்வு காணும். இந்த நிகழ்ச்சியில் ஐ.நாவுக்கான கைலாசாவின் நிரந்தர தூதர் விஜயப்ரியா நித்யானந்தா மற்றும் நெவார்க் நகர மேயர் பராக்கா ஆகியோர் பங்கேற்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இந்து மதம்
இது குறித்து கைலாசா சார்பில் விடப்பட்டுள்ள அறிக்கையில், "பண்டைய காலத்தில் இந்து மதமானது சுமார் 56 நாடுகளின் அரச மதமாக இருந்தது. ஆனால் தற்போது உண்மையான இந்து மதம் அழிவின் விளம்பில் இருக்கிறது. இதனை மீட்டெடுத்து பழையபடி உலக நாடுகளின் அரச மதமாக இந்து மதத்தை மாற்ற இந்து மதத்தின் தலைவரான நித்தியானந்தா முயன்று வருகிறார். அதன் ஒரு பகுதிதான் இது. இவ்வாறு தொடர் முயற்சிகள் மூலம் உலகெங்கிலும் உள்ள இந்துக்களை பாதுகாத்து உலக நாடுகளுடன் ஒரு பாலத்தை கைலாசா உருவாக்க விரும்புகிறது" என்று கூறியுள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications