பாகிஸ்தான் சிறப்பாக செயல்படுது.. தீவிரவாதத்தை கட்டுப்படுத்துகிறது.. பாராட்டி தள்ளும் டிரம்ப்! போச்சு
நியூயார்க்: அமெரிக்கா பாகிஸ்தானின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை பாராட்டியுள்ளது. பிராந்திய மற்றும் உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக இருக்கும் பயங்கரவாத அமைப்புகளை கட்டுப்படுத்துவதில் பாகிஸ்தான் தொடர்ந்து வெற்றி பெறுவதாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.
இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற அமெரிக்கா-பாகிஸ்தான் பயங்கரவாத எதிர்ப்பு பேச்சுவார்த்தைக்குப் பிறகு இரு நாடுகளும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான தங்களின் உறுதிப்பாட்டை இரு தரப்பும் மீண்டும் வலியுறுத்தின.

இந்த பாராட்டு, பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய 'தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்' (TRF) அமைப்பை அமெரிக்கா பயங்கரவாத அமைப்பாக அறிவித்த சில நாட்களுக்குப் பிறகு வந்துள்ளது. லஷ்கர்-இ-தைபாவின் கிளையான TRF அமைப்பை, வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பு (FTO) மற்றும் குறிப்பாக நியமிக்கப்பட்ட உலகளாவிய பயங்கரவாதி (SDGT) என அமெரிக்கா அறிவித்தது.
இந்த பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் சார்பில் ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்புச் செயலாளர் நபீல் முனிர் தலைமை தாங்கினார். அமெரிக்கா சார்பில் பயங்கரவாத எதிர்ப்புக்கான மாநிலத் துறையின் பொறுப்பு ஒருங்கிணைப்பாளர் கிரிகோரி டி லோகெர்ஃபோ இணைத் தலைமை தாங்கினார்.
அமெரிக்கா பாகிஸ்தான் உறவில் டிரம்ப் ஆட்சியில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் சந்திப்புக்குப் பிறகு, பாகிஸ்தானுக்கு அமெரிக்காவின் ஆதரவு அதிகரித்துள்ளது. கிட்டத்தட்ட நேற்று இரவோடு இரவாக டிரம்ப் இந்தியாவின் முதுகில் குத்தி இருக்கிறார்.
பலுசிஸ்தான் விடுதலை ராணுவத்தை (BLA) ஒரு வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்துள்ளது. பிஎல்ஏ எனப்படும் பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பல ஆண்டுகளாக பாகிஸ்தானில் குறிப்பாக ராணுவத்தை குறிவைத்து தாக்குதல்களை நடத்தியுள்ளது. ஆனால், இந்த அமைப்பு பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டது முனீரின் அமெரிக்க பயணத்தின்போது என்பது குறிப்பிடத்தக்கது.
பலுசிஸ்தான் விடுதலை ராணுவம்
அசிம் முனீரின் அமெரிக்கப் பயணத்தின்போது, பிஎல்ஏ பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டது. அவருக்கு ஒரு ராஜதந்திர வெற்றியாகக் கருதப்படுகிறது. இரண்டு மாதங்களுக்குள் இது முனீரின் இரண்டாவது அமெரிக்கப் பயணம். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பொறுப்பேற்ற தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) அமைப்பை அமெரிக்கா பயங்கரவாத அமைப்பாக அறிவித்த சில வாரங்களிலேயே இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. . பலுசிஸ்தான் விடுதலைக் குழுவை பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்ததன் மூலம், பாகிஸ்தானும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது என்பது காட்டப்பட்டுள்ளது.
இந்தியா அமெரிக்கா உறவில் சிக்கல்
இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையேயான உறவில் பதட்டங்கள் அதிகரித்துள்ளன. ரஷ்ய எண்ணெயை வாங்கியதற்காக இந்தியா மீது டொனால்ட் டிரம்ப் 50% வரி விதித்ததால் இந்த பதற்றம் ஏற்பட்டது. இருப்பினும், அமெரிக்காவின் அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், இந்தியா தனது தேசிய நலனில் சமரசம் செய்யப்போவதில்லை என்று உறுதியாக அறிவித்துள்ளது.
சுதந்திர பலுசிஸ்தானுக்காகப் போராடும் பலுசிஸ்தான் விடுதலை இராணுவம், மஜீத் படைப்பிரிவின் தற்கொலைத் தாக்குதல்கள் உட்பட பல தாக்குதல்களுக்குப் பின்னால் உள்ளது. அண்மையில் மார்ச் மாதம், குவெட்டாவிலிருந்து பெஷாவர் சென்ற ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலைக் கடத்தியதற்கு இந்த அமைப்பு பொறுப்பேற்றது. இதில் டஜன் கணக்கான பயணிகள் மற்றும் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
முனீரின் இரண்டாவது அமெரிக்கப் பயணத்திற்குப் பிறகு, டிரம்ப் ஆட்சியில் இஸ்லாமாபாத்-வாஷிங்டன் உறவுகள் மறுசீரமைக்கப்பட்டு வருவதால், முனீர் மகிழ்ச்சியுடன் திரும்பினார். ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, அதே டிரம்ப், பாகிஸ்தான் அமெரிக்காவிற்கு "பொய்களையும்" பயங்கரவாதிகளுக்கு புகலிடங்களையும் மட்டுமே அளிக்கிறது என்று குற்றம் சாட்டினார்.
டிரம்ப் பாகிஸ்தான் உறவுகள் மாறிவிட்டன
அமெரிக்க மண்ணில் இருந்து கூட முனீர் இந்தியாவின் மீது அணுசக்தி தாக்குதல் நடத்தப் போவதாக மிரட்டியதற்கு வாஷிங்டனிடம் இருந்து எந்தப் பதிலும், கண்டனமும் இல்லை. புளோரிடாவின் டம்பாவில் உள்ள பாகிஸ்தான் புலம்பெயர்ந்தோரிடம் பேசிய முனிர், "நாங்கள் ஒரு அணுசக்தி நாடு. நாங்கள் வீழ்ச்சியடைந்தால், உலகத்தின் பாதியை எங்களுடன் எடுத்துச் செல்வோம்," என்று கூறியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications