எங்களால் எதுவும் செய்ய முடியாது.. கைவிரித்த யு.எஸ்! முக்கியமான கட்டத்தை எட்டிய இஸ்ரேல் - ஈரான் போர்
நியூயார்க்: ஈரான் இஸ்ரேலை தாக்கினால்.. அதன்பின் நடக்க போகும் விஷயங்களை நாங்கள் தடுக்க முடியாது. முக்கியமாக இஸ்ரேல் பதிலடி கொடுக்க விரும்பினால் இஸ்ரேலை நாங்கள் தடுக்க மாட்டோம் என்று அமெரிக்கா தெரிவித்து உள்ளது.
இஸ்ரேலை எங்களால் "கட்டுப்படுத்த முடியாது" என்று ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. சமீபத்தில் நடந்த இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்க ஈரான் திட்டமிட்டு வரும் நிலையில் இந்த எச்சரிக்கை அமெரிக்கா சார்பாக விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் 1 அன்று நடத்தப்பட்ட ஈரானின் ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக கடந்த சில நாட்களுக்கு முன் இஸ்ரேலிய படைகள் ஈரானில் தாக்குதல் நடத்தின. ஈரான் மீது இஸ்ரேலின் மூன்று துல்லியமான தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தி உள்ளது. 100 க்கும் மேற்பட்ட விமானங்களை களமிறக்கி இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தி உள்ளது. இதில் அமெரிக்காவிடம் இருந்து வாங்கிய அதிநவீன F-35 உட்பட நவீன விமானங்களை இஸ்ரேல் பயன்படுத்தி உள்ளது. மொத்தமாக 2,000 கிமீ பயணத்தை மேற்கொண்டு இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தி உள்ளது.
குறிப்பாக ஈரானில் மக்கள் வசிக்கும் பகுதிகளை குறி வைக்காமல்.. ராணுவ இலக்குகளைத் தாக்கி உள்ளது இஸ்ரேல். அணு மற்றும் எண்ணெய் உற்பத்தி மையங்களை தவிர்த்து.. மேற்கொண்டு மோதலை தவிர்க்கும் விதமாக இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்தி உள்ளது.
இஸ்ரேல் வெளியிட்ட ஊடக அறிக்கைகளின்படி, இஸ்ரேலிய ராணுவம் ஈரானின் ராணுவ தளங்களில் மட்டுமே கவனம் செலுத்தியது. இரண்டு நாடுகளுக்கு இடையிலான மோதல் மேலும் அதிகரிப்பதை தடுக்க அணு மற்றும் எண்ணெய் மையங்களை தவிர்த்து இஸ்ரேல் ஜாக்கிரதையாக தாக்குதல் நடத்தி உள்ளது.
இந்த தாக்குதல் தற்போது நிறைவு பெற்றுவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. தங்களின் தாக்குதல் வெற்றிபெற்றுவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்து உள்ளது. ஈரானிடம் இருந்தும்.. ஈரானின் துணை அமைப்புகளிடம் இருந்தும் பதிலடியை இஸ்ரேல் எதிர்பார்க்கிறது என்பதால் இஸ்ரேல் அதிக எச்சரிக்கையுடன் உள்ளது.
தாக்குதல்: இப்படிப்பட்ட நிலையில்தான் ஈரான் இஸ்ரேலை தாக்கினால்.. அதன்பின் நடக்க போகும் விஷயங்களை நாங்கள் தடுக்க முடியாது. முக்கியமாக இஸ்ரேல் பதிலடி கொடுக்க விரும்பினால் இஸ்ரேலை நாங்கள் தடுக்க மாட்டோம் என்று அமெரிக்கா தெரிவித்து உள்ளது. அதோடு இஸ்ரேலை நாங்கள் இரும்புக்கரம் கொண்டு பாதுகாப்போம்.. ஈரான் இஸ்ரேலுக்கு பதிலடி தர நினைத்தால் கடுமையான விளைவுகளை சந்திக்கும் என்று அமெரிக்கா எச்சரித்து உள்ளது.
இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு பதில் தர ஈரான் நினைக்க கூடாது. இரண்டு தரப்பும் மாறி மாறி தாக்கிவிட்டன. இந்த மோதல் முடிந்துவிட்டது. இனி ஈரான் தவறு செய்யக்கூடாது. இனி ஈரான் தாக்குதல் நடத்தினால் அது நிலைமையை மோசமாக்கும்.
அமெரிக்கப் படைகள் இஸ்ரேலை பாதுகாக்கும். இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலளிப்பதில் ஈரான் தவறு செய்யக்கூடாது என்று அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்டிடம் பேசிய பிறகு கூறினார். இஸ்ரேலுக்காக பாதுகாப்பாக உறுதுணையாக இருப்போம்.
ஈரான் இதில் இனி எந்த விதமான தாக்குதலையும் நடத்த கூடாது. இஸ்ரேலை நாங்கள் இரும்புக்கரம் கொண்டு பாதுகாப்போம்.. ஈரான் இஸ்ரேலுக்கு பதிலடி தர நினைத்தால் கடுமையான விளைவுகளை சந்திக்கும் என்று அமெரிக்கா எச்சரித்து உள்ளது.












Click it and Unblock the Notifications