கோடநாடு எஸ்டேட்டில் 'அன்று' கரண்ட் கட்டானது எப்படி? பின்னணியில் யார்? மேலும் 4 தனிப்படைகள் அமைப்பு
ஊட்டி: கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக இன்று மேலும் புதிதாக 4 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளன. இந்த 4 தனிப்படைகள் உடன் சேர்த்து மொத்தம் 5 தனிப்படைகள் இந்த வழக்கில் தனித்தனி கோணங்களில் தீவிர விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளன.
குறிப்பாக சம்பவம் நடைபெற்ற கோடநாடு எஸ்டேட் பகுதியில் மின்சாரம் துண்டிப்பு நடந்தது எப்படி என்ற கோணத்தில் தீவிர விசாரணை துவங்கப்பட்டு இருக்கிறது.
கோடநாடு கொலை வழக்கு தற்போது மிகவும் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த வழக்கு தொடர்பாக நேற்று ஒரு தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கி விடப்பட்டது.

5 தனிப்படைகள் தீவிரம்
இன்று மேலும் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. விசாரணை பல்வேறு கோணங்களில் நடத்தப்பட வேண்டியிருப்பதால் தனிப்படைகள் எண்ணிக்கை அதிகரித்து 5 ஆக உயர்ந்துள்ளது. தனிப்படைகள் ஒவ்வொன்றுமே, ஒவ்வொரு கோணத்தில் விசாரணை நடத்த உள்ளன.

பல கோணங்கள்
ஏனென்றால், கொலை கொள்ளை மட்டுமன்றி இந்த வழக்கு தொடர்புடைய சம்பவங்கள் பல இருக்கின்றன. ஒவ்வொரு காரணம் பற்றியும் ஒவ்வொரு தனிப்படை விசாரணை செய்தால் இந்த விசாரணை விரைவில் முடிவடைந்து குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என்று அரசு நினைத்து அதிவேகமாக நடவடிக்கை எடுக்க ஆரம்பித்திருக்கிறது.

மின்சார இணைப்பு துண்டிப்பு
கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை செய்யப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டது 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி. அன்றைய தினம் எஸ்டேட் பகுதியில் திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்துள்ளது. இதுவரை சாட்சியங்கள் இதனை உறுதி செய்துள்ளன. ஆனால் கொடநாடு எஸ்டேட் பகுதியில் மின் இணைப்பு அவ்வளவு எளிதாக துண்டிக்கப்பட முடியாது.

பாதுகாப்பு வளையம்
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதும், எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோதும், அவர் சென்று தங்குவார் என்பதால் அதிநவீன பாதுகாப்பு வளையம் மற்றும் அதிநவீன வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. நேரடியாக மின்சார இணைப்பு துணை மின் நிலையத்தில் இருந்து கொண்டுவரப்பட்டதாக தகவல்கள் உண்டு. அப்படியிருக்கும்போது எப்படி மின்சாரம் துண்டிக்கப்பட்டது என்பது மிகப் பெரிய கேள்வியாக எழுந்துள்ளது. மின்சார வாரியத்தில் யாரேனும் இதற்கு துணையாக இருப்பார்களா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.

உத்தரவிட்டது யார்
அன்றைய தினம் யார் யார் மின் வினியோக பணியில் இருந்தார்களோ அவர்கள் ஒவ்வொருவரிடமும் காவல்துறையினர் விசாரணையை நடத்த ஆரம்பித்துள்ளனர். மின்சாரம் துண்டிக்கப்பட்டால் அது தொடர்பாக, புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டு இருக்கும். அந்த புத்தகம் தற்போது காவல்துறையினரால், எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. மின்சாரம் அதிகாரிகள் துணையோடு துண்டிக்கப்பட்டிருந்தால், அதற்கான உத்தரவை பிறப்பித்தது யார் என்ற கேள்வி எழும். எனவே, இது போன்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளதால் கோடநாடு விசாரணை முக்கிய கட்டத்தை அடைந்துள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications