தமிழக மசூதியில் ஒலித்த பாங்கு.. 2.45 நிமிடம் பேச்சை நிறுத்தி காத்திருந்த ராகுல்.. வெளியான வீடியோ
நீலகிரி: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல்காந்தி நேற்று நீலகிரி மாவட்டம் கூடலூரில் பேசினார். அப்போது மசூதியில் தொழுகைக்கான அழைப்பான பாங்கு ஒலிக்கப்பட்டது. இதை கேட்ட ராகுல் காந்தி தனது பேச்சை 2.45 நிமிடங்கள் வரை நிறுத்தினார். இதுதொடர்பான வீடியோ வெளியான நிலையில் ராகுல் காந்தியின் செயலுக்கு வரவேற்பு கொடுத்துள்ளனர்.
2024 நாடாளுமன்ற தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சி பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டு வருகிறது. கன்னியாகுமரியில் துவங்கிய இந்த பாதயாத்திரை கடந்த 7ந் தேதி தொடங்கினார்.
இந்திய ஒற்றுமைக்கான பேரணி என்ற பெயரில் இந்த யாத்திரை கேரளாவில் முடிவடைந்துள்ளது. இன்று முதல் கர்நாடகத்தில் துவங்கி நடைபெற உள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் ராகுல்
இந்நிலையில் தான் தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் கூடலூர் கோழிப்பாலத்தை நேற்று ராகுல் காந்தி அடைந்தார். காங்கிரஸ் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். கட்சியின் வளர்ச்சி தொடர்பாக பல்வேறு விஷயங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. தேயிலை தோட்டத் தொழிலாளர் பிரதிநிதிகள், விவசாயிகளின் குறைகளை கேட்டார். அதன்பிறகு ஊர்வலம் சென்றனர். புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஜங்ஷனில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் ராகுல்காந்தி பேசினார்.

ஒற்றுமைக்கான இடம் என புகழாரம்
அப்போது ‛‛கூடலூர் 3 மொழி, 3 கலாச்சாரம், 3 மொழிகளை இணைக்கும் இடமாக உள்ளது. இங்கு தமிழ், மலையாளம், கன்னடம் என 3 மொழிகளும் ஒன்றாக இணைந்து இருக்கிறது. வெவ்வேறு மதங்களின் அடிப்படை தன்மையையும், அதன் முறையையும் பிற மதங்கள் வரவேற்கும் வகையில் இந்த இடம் உள்ளது. இந்த யாத்திரையின் கொள்கையை நிரூபிக்கும் வகையில் இந்த இடம் அமைந்துள்ளது. எந்த கொள்கைக்காக நடத்தப்படுகிறதோ அந்த கொள்கை அனைத்தும் இந்த இடத்தில் இருக்கிறது. கவர்னர்களின் தலையீடு நாங்கள் இங்கே ஒற்றுமை பற்றியும், ஒன்றாக சேர்ந்து வாழ்வதை இங்கு கொண்டு வரவில்லை. அதற்கு மாறாக எப்படி ஒன்றாக இருக்க வேண்டும். எப்படி இணைந்து வாழ வேண்டும் என்பதை உங்களிடத்தில் இருந்து பிற மக்களுக்கு எடுத்துச்செல்கின்றோம்'' என்பன உள்பட பல்வேற அம்சங்கள் குறித்து ராகுல் காந்தி பேசினார்.

பேச்சை நிறுத்திய ராகுல் காந்தி
இவ்வாறு ராகுல் காந்தி பேசி கொண்டிருந்தார். இந்த வேளையில் மேடையின் அருகே இருந்த மசூதியில் இருந்து இஸ்லாமியர்களை தொழுகைக்கு அழைக்கும் பாங்கு ஒலிக்கப்பட்டது. இதை கேட்ட ராகுல் காந்தி தனது பேச்சை நிறுத்தினார். 2 நிமிடம் 45 வினாடிகள் வரை உரையை நிறுத்தியபடியே ராகுல் காந்தி காந்தி காத்திருந்தார். பாங்கு முழுமையாக ஒலித்த பிறகு ராகுல் காந்தி தனது உரையை தொடங்கினார்.

பாராட்டு
இந்நிலையில் ராகுல்காந்தி தனது பேச்சை நிறுத்தும் வீடியோ இணையதளங்களில் வெளியாகி உள்ளது. இந்த வீடியோ வுக்கு தற்போது பல்வேறு தரப்பினர் கருத்துகள் தெரிவித்து வருகின்றனர். நாட்டில் மதம்சார்ந்த விஷயங்கள் தொடர்பாக சர்ச்சைகள் கிளம்பி வரும் நிலையில் ராகுல் காந்தியின் இந்த செயலுக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
-
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை.. புதுவையில் திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பு -
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
உடையும் திமுக காங்கிரஸ் கூட்டணி? தொகுதிகளை முடிவு செய்வதில் நீடிக்கும் குழப்பம்! புதுச்சேரியில் பரபர -
கோவை, நீலகிரிக்கு பறந்த அலர்ட்.. கொட்டப்போகும் மழை! வானிலை மையம் கொடுத்த அப்டேட்!












Click it and Unblock the Notifications