ஊட்டியில் இடி, மின்னலுடன் கொட்டிய கனமழை.. வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர்.. தவித்து போன மக்கள்
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் பலத்த மழை பெய்து வருகிறது
ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நேற்று மாலை முதல் விடிய விடிய இடி, மின்னலுடன் கன மழை பெய்ததால், 50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது... மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.
வட கிழக்கு பருவ மழை மற்றும் வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய தொடங்கியுள்ள நிலையில் மலை மாவட்டமான நீலகிரியிலும் கன மழை கொட்டி வருகிறது.

இடி மின்னல்
ஊட்டியில் கடந்த சில தினங்களாகவே மழை பெய்து வருகிறது.. நேற்றைய தினம், மாலை நேரத்தில் 5 மணிக்கு ஆரம்பித்த மழையானது, இரவு வரை நீடித்தது.. பிறகு மீண்டும் 10 மணிக்கு கனமழை பெய்ய ஆரம்பித்தது.. கிட்டத்தட்ட 4 மணி நேரத்திற்கு மேலாக இடி, மின்னலுடன் கன மழை பெய்தது இதனால், 50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது..

பஸ் ஸ்டாண்டு
ஊட்டி மற்றும் மற்றும் அதனை சுற்றியுள்ள தலைகுந்தா, பிங்கர்போஸ்ட், பாலாடா உள்ளிட்ட அனைத்து கிராம பகுதிகளிலும், கோத்தகிரி, குந்தா, கூடாலூர், குன்னூர் உள்பட மாவட்டம் முழுவதும் கன மழை வெளுத்து வாங்கியது. உதகை சுற்றுவட்டார பகுதிகளில் இடி, மின்னலுடன் 4 மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்த கன மழையால் காந்தள், கீரின்பீல்ட்டு உள்ளிட்ட பல பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள்ளும் நகராட்சி சந்தைக்குள்ளும் மழை நீர் புகுந்தது. பஸ் ஸ்டாண்டு ரோட்டிலும் தண்ணீரில் சிக்கிய வாகனங்களை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

மழை
கன மழையின் காரணமாக சாலைகளால் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இடைவிடாது பெய்த கன மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கபட்டுள்ளது. ஊட்டியில் மின்தடையும் ஏற்பட்டுள்ளது.. மண்சரிவும் ஏற்பட்டுள்ளது.. உதகை புதுமந்து சாலையில் மண் சரிவு ஏற்பட்டதையடுத்து ஜேசிபி வரவழைத்து சாலையில் சரிந்த மண் அகற்றப்பட்டு வருகிறது.. அதபோல, காந்தள் குருசடி காலனி, பென்னட் மார்க்கெட்டில் 300 வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துவிட்டது..

ஊழியர்கள்
ஊட்டி மார்க்கெட்டில் மழைநீர் சூழ்ந்ததால் வாகனங்கள் மழைநீரில் சிக்கி கொண்டன.. அதேபோல,படகு இல்ல சாலைகளில் ஆட்டோ ஸ்டாண்ட் ஒட்டியுள்ள நடைபாதை கடைமீது கருங்கல் தடுப்பு சுவர் சரிந்து அந்த கடையே முற்றிலும் சேதமாகிவிட்டது. மாநகராட்சி ஊழியர்கள் ஆங்காங்கே மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
ஏற்கனவே அவிஞ்சு போய் கிடக்கு.. மேற்கொண்டு வெறியைக் கிளப்பும் எல்-நினோ! ஆகஸ்ட் வரை வெயில் தானாம்! -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications