ஆ.ராசாவுக்கு எதிர்ப்பு - இந்து முன்னணி “பந்த்”.. கடையை திறந்த “ரஹீம்” - கல்வீசிய கும்பலால் பதற்றம்

Subscribe to Oneindia Tamil

நீலகிரி: நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவை கண்டித்து இந்து முன்னணி அமைப்பினர் சார்பில் நீலகிரி மாவட்டம் முழுவதும் இன்று ஒரு நாள் முழு கடையடைப்பு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அடைக்கப்படாத கடையின் மீது மர்ம கும்பல் கல்வீச்சில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்து மக்களை இழிவாக பேசியதாக நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவை கண்டித்து நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட உதகை, கூடலூர், குன்னூர், மேட்டுப்பாளையம், பவானிசாகர், அன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் இந்து முன்னனி சார்பில் இன்று ஒரு நாள் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

இதனை அடுத்து இன்று நீலகிரி மாவட்டம் முழுவதும் 50 சதவீத கடைகள் திறந்தும், 50 சதவீத கடைகள் அடைத்தும் வைக்கப்பட்டன. இதற்காக இன்று காலை முதல் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஸிஸ் ராவத் தலைமையில் 850க்கும் மேற்பட்ட போலீசார் பலத்த பாதுகாப்பு மற்றும் ரோந்து பணிகளில் ஈடுபட்டனர்.

 போலீஸ் எச்சரிக்கை

போலீஸ் எச்சரிக்கை

குறிப்பாக துப்பாக்கி ஏந்திய போலீசாரும், அதிரடி படையினரும் முக்கிய நகரப் பகுதிகளில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
அப்போது மேலும் திறக்கப்பட்ட கடைகளை மூட வற்புறுத்தும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடைகள் திறப்பு

கடைகள் திறப்பு

இந்நிலையில் பந்தலூர் பஜார் பகுதியில் இந்து முன்னணி அமைப்பினர் சார்பில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்று காலை வழக்கம் போல் சில வியாபாரிகள் கடைகளை திறந்து வைத்துள்ளனர்.

தாக்குதல்

தாக்குதல்

அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த மூன்று இளைஞர்கள் திறந்து இருந்த அப்தும் ரஹீம் என்ற நபரின் கடையின் மீது கல்லெறிந்து கடை வியாபாரி மீதும் தாக்குதல் நடத்தி உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. கடை வியாபாரி மீது தாக்குதல் நடத்திய நபர்கள் மீது பந்தலூர் வியாபாரிகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

போலீஸ் விசாரணை

போலீஸ் விசாரணை

மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து குறிப்பிட்ட ஒரு நபரின் கடையில் கல்லெறிந்து தாக்கப்பட்டது காழ்புணர்ச்சியின் காரணமாகவா அல்லது முன்விரோதமா என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு தாக்குதலில் ஈடுபட்ட மூன்று நபர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+