ஆ.ராசாவுக்கு எதிர்ப்பு - இந்து முன்னணி “பந்த்”.. கடையை திறந்த “ரஹீம்” - கல்வீசிய கும்பலால் பதற்றம்
நீலகிரி: நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவை கண்டித்து இந்து முன்னணி அமைப்பினர் சார்பில் நீலகிரி மாவட்டம் முழுவதும் இன்று ஒரு நாள் முழு கடையடைப்பு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அடைக்கப்படாத கடையின் மீது மர்ம கும்பல் கல்வீச்சில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்து மக்களை இழிவாக பேசியதாக நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவை கண்டித்து நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட உதகை, கூடலூர், குன்னூர், மேட்டுப்பாளையம், பவானிசாகர், அன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் இந்து முன்னனி சார்பில் இன்று ஒரு நாள் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
இதனை அடுத்து இன்று நீலகிரி மாவட்டம் முழுவதும் 50 சதவீத கடைகள் திறந்தும், 50 சதவீத கடைகள் அடைத்தும் வைக்கப்பட்டன. இதற்காக இன்று காலை முதல் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஸிஸ் ராவத் தலைமையில் 850க்கும் மேற்பட்ட போலீசார் பலத்த பாதுகாப்பு மற்றும் ரோந்து பணிகளில் ஈடுபட்டனர்.

போலீஸ் எச்சரிக்கை
குறிப்பாக துப்பாக்கி ஏந்திய போலீசாரும், அதிரடி படையினரும் முக்கிய நகரப் பகுதிகளில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
அப்போது மேலும் திறக்கப்பட்ட கடைகளை மூட வற்புறுத்தும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடைகள் திறப்பு
இந்நிலையில் பந்தலூர் பஜார் பகுதியில் இந்து முன்னணி அமைப்பினர் சார்பில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்று காலை வழக்கம் போல் சில வியாபாரிகள் கடைகளை திறந்து வைத்துள்ளனர்.

தாக்குதல்
அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த மூன்று இளைஞர்கள் திறந்து இருந்த அப்தும் ரஹீம் என்ற நபரின் கடையின் மீது கல்லெறிந்து கடை வியாபாரி மீதும் தாக்குதல் நடத்தி உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. கடை வியாபாரி மீது தாக்குதல் நடத்திய நபர்கள் மீது பந்தலூர் வியாபாரிகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

போலீஸ் விசாரணை
மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து குறிப்பிட்ட ஒரு நபரின் கடையில் கல்லெறிந்து தாக்கப்பட்டது காழ்புணர்ச்சியின் காரணமாகவா அல்லது முன்விரோதமா என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு தாக்குதலில் ஈடுபட்ட மூன்று நபர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
-
ஹோட்டல்களுக்கு குட் நியூஸ்..! 23ஆம் தேதி முதல் கூடுதல் வணிக சிலிண்டர்கள்.. மத்திய அரசு அறிவிப்பு! -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்!












Click it and Unblock the Notifications