கொரோனாவை சமாளிக்க முடியலடா சாமி.. பிரான்சில் 3-வது முறையாக நாடு தழுவிய லாக்டவுன் அமல்!
பாரிஸ்: பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் பிரான்சில் மூன்றாவது முறையாக நாடு தழுவிய ஊரடங்கை அறிவித்தார்.
பிரான்சில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 41,907 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

விடாத கொரோனா தாக்கம்
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் பிறப்பெடுத்த கொரோனா வைரஸ் ஒரு ஆண்டை கடந்தும் உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. உலகின் வல்லரசு நாடான அமெரிக்கா, இந்தியா, பிரேசில் என பல்வேறு நாடுகளில் கொரோனா தாக்கம் மிக அதிகமாக உள்ளது.

பிரான்சில் தீயாய் பரவும் கொரோனா
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்சில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 41,907 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு 303 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு நீண்ட நாட்களாக கொரோனா வேகம் எடுத்து வருகிறது.

கட்டுப்பாட்டை இழந்து விடுவோம்
இந்த நிலையில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் பிரான்சில் மூன்றாவது முறையாக நாடு தழுவிய ஊரடங்கை அறிவித்தார். ஒரு மாதத்திற்கு இந்த ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி நிலையங்களும் 3 வாரங்களுக்கு மூடப்படுவதாக அவர் அறிவித்தார்.'' இப்போது நடவடிக்கை எடுக்காவிட்டால் நாம் கட்டுப்பாட்டை இழந்து விடுவோம்.

தடுப்பூசியே சிறந்த தீர்வு
கொரோனாவை தடுக்க தடுப்பூசி போடுவதே சிறந்த தீர்வாக இருக்கும். மே மாத நடுப்பகுதியில் நாட்டில் சகஜ நிலை திரும்பும் என நம்புகிறேன் என்று தொலைக்காட்சியில் உரையாற்றிய இமானுவேல் மேக்ரான் நாட்டு மக்களிடம் தெரிவித்தார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications