தமிழகத்தைத் தொடர்ந்து! புதுவையிலும் பெண்களுக்கு ரூ 5000! யாருக்கெல்லாம் கிடைக்கும்?
புதுவை: தமிழகத்தைத் தொடர்ந்து புதுவையில் மகளிர் உரிமைத் தொகை ரூ 5000 வரவு வைக்கப்படுவதாக அந்த மாநில ஆளுநர் கைலாஷ்நாதன் அறிவித்துள்ளார். இதனால் பயனாளிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை மாதந்தோறும் ரூ 1000 வழங்கப்பட்டு வருகிறது. சுமார் இரண்டரை ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை பார்த்து மற்ற மாநிலங்களும் பெண்களுக்கு இந்த உரிமைத்தொகையை அறிவித்து வருகின்றன.
அந்த வகையில் புதுவையில் சிவப்பு ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள், அதாவது 21 வயது முதல் 55 வயதுக்குள்பட்ட வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள 65 ஆயிரம் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ 1000 வழங்கப்பட்டு வந்தது.
இதற்காக 6.50 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. இந்த நிலையில் இந்த உரிமைத் தொகை ரூ 2500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். இதற்கு துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் ஒப்புதலும் அளித்தார்.
இந்த முறையால் அரசுக்கு கூடுதலாக 9.75 கோடி ரூபாய் செலவாகும் என கணிக்கப்பட்டது. அது போல் எந்த உரிமைத் தொகையும் பெறாத மஞ்சள் ரேஷன்கார்டு வைத்துள்ள குடும்பத் தலைவிகளுக்கு ரூ 1000 வழங்கப்படும் என ரங்கசாமி சட்டசபை மானிய கோரிக்கையின் போது அறிவித்தார். இந்த திட்டத்தின் கீழ் 1 லட்சம் இல்லத்தரசிகள் பயன்பெறுவர் என சொல்லப்பட்டது. இதன் மூலம் அரசுக்கு கூடுதலாக 10 கோடி ரூபாய் செலவாகும் என சொல்லப்பட்டது.
அது போல் தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு ரூ 3000 ரொக்கம் கொடுக்கப்பட்டது. இதை பின்பற்றி புதுவையில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ்- பாஜக கூட்டணி அரசு, ரேஷன் கார்டுக்கு ரூ 3000 ரொக்கமும், ரூ 750 மதிப்பிலான பொங்கல் தொகுப்பும் வழங்கியது.
இந்த நிலையில் தேர்தல் அறிவிப்பு வெளியானால் மகளிருக்கு உரிமைத் தொகை கொடுக்க இயலாது என்பதால் 3 மாதத்திற்கான உரிமைத் தொகையும் கோடைக்கால நிவாரணமாக ரூ 2 ஆயிரம் சேர்த்து ரூ 5 ஆயிரம் மகளிர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
இந்த நடவடிக்கை புதுவை மக்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் முதல்வர் ரங்கசாமி, ஆளுநர் கைலாஷ்நாதனை சந்தித்து புதுவையில் மகளிர் உரிமைத் தொகையை 2 மாதங்களுக்கு முன்பே கொடுக்க அதற்கான நிதியை முன் கூட்டியே வழங்குமாறு கோரியிருந்தார்.

இந்த சமயத்தில்தான் ஆளுநர் கைலாஷ்நாதன் பேஸ்புக்கில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் புதுவையில் 63 ஆயிரம் குடும்பத் தலைவிகளுக்கு அடுத்த 2 மாதங்களுக்கான மாதாந்திர நிதியுதவி ரூ 2500 வீதம் மொத்தம் ரூ 5000 வழங்கப்படவுள்ளது என தெரிவித்துள்ளது. இது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த பணம் ஓரிரு நாட்களில் குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என தெரிகிறது. சிவப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. மஞ்சள் அட்டைதாரர்களுக்கு இந்த 2 மாத தொகை முன்கூட்டியே வழங்கப்படுமா என்பது தெரியவில்லை.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications