மொத்தக் குமுறலையும் ரோட்டில் கொட்டிய நாராயணசாமி.. பரபரக்கும் புதுச்சேரி
Recommended Video

புதுச்சேரி: புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமிக்கும், துணை நிலை ஆளுநர் கிரண் பேடிக்கும் இடையிலான லடாய் நாடறிந்தது. இன்று அது நடு ரோட்டுக்கு வந்து விட்டது.
கிரண் பேடி துணை நிலை ஆளுநராக வந்தது முதலே பஞ்சாயத்துதான். முதல்வர் நாராயணசாமிக்கும், அவருக்கும் பொழுது விடிந்து பொழுது போனால் ஏதாவது ஒரு சண்டை.
இருவருக்கும் இடையிலான மோதல் நாளுக்கு நாள் வலுத்து வருகிறதே தவிர கொஞசம் கூட குறைந்தபாடில்லை. இப்போது ஹெல்மெட் அணிவதிலும் இவர்களுக்கு இடையே மோதல் வெடித்துள்ளது.

கட்டாய ஹெல்மெட் சட்டம்
புதுச்சேரி மாநிலத்தில் நேற்று முன்தினம் முதல் கட்டாய ஹெல்மெட் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களிடம் முதல் முறை 100 ரூபாயும், இரண்டாவது முறை 200 ரூபாயும், மூன்றாவது முறை மூன்று மாதத்திற்கு ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது. மேலும் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களிடம் போலீசார் தீவிரமாக அபராதம் வசூலித்து வருகின்றனர்.

நாராயணசாமியின் உத்தரவு
ஆனால் கட்டாய ஹெல்மெட் சட்டத்தை புதுச்சேரி மாநிலத்தில் படிப்படியாக நடைமுறைப்படுத்தலாம் என்ற முதலமைச்சர் நாராயணசாமியின் உத்தரவுக்கு மாறாக, துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அதிகாரிளுக்கு அழுத்தம் கொடுத்து கட்டாய ஹெல்மெட் சட்டத்தை நடைமுறைபடுத்தி, பொதுமக்களிடம் அபராதம் விதித்து வருவதற்கு எதிர்ப்பு வெடித்துள்ளது.

ரோட்டுக்கு வந்த மோதல்
இன்று நடு ரோட்டுக்கு வந்து விட்டது இந்த மோதல். முதலமைச்சர் நாராயணசாமி கருப்பு சட்டை அணிந்தும், அமைச்சர்கள் நமச்சிவாயம், ஷாஜகான், மல்லாடி கிருஷ்ணாராவ், கமலக்கண்ணன், கந்தசாமி மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சி தொண்டர்கள் உள்ளிட்டோர் கருப்பு துண்டு அணிந்து சட்டப் பேரவையிலிருந்து புறப்பட்டு ஆளுநர் மாளிகை நோக்கி ஊர்வலமாக சென்றனர்.

ஆளுநர் மாளிகை வெளியே தர்ணா
அப்போது ஆளுநர் மாளிகையின் வெளியே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்களை தடுத்து நிறுத்தியதால், இருதரப்புக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை மட்டும காவல்துறைனர் ஆளுநர் மாளிகை செல்ல அனுமதித்தனர். பின்னர் ஆளுநர் மாளிகை சென்ற முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கிரண்பேடியை கண்டித்து ஆளுநர் மாளிகை வெளியே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மொத்தமாக தீர்வு காண
முதல் முறையாக ஆளுநருக்கு எதிராக மாநில முதல்வர் தர்ணாவில் குதித்துள்ளார். காங்கிரஸ் தொண்டர்கள் தொடர்ந்து ஆளுநர் மாளிகை நோக்கி வந்து கொண்டிருப்பதால் ஆளுநர் மாளிகை உள்ள பகுதியில் பதற்றமான சூழ்நிலை காணப்பட்டது. ஆனால் இதுவரை இருந்து வரும் பிரச்சினைகளுக்கு மொத்தமாக தீர்வு காணும் வகையிலேயே நாராயணசாமி போராட்டத்தில் குதித்து விட்டதாக சொல்லப்படுகிறது.
ஆனால் கிரண் பேடியும் இறங்கிப் போகக் கூடிய ஆள் இல்லை என்பதால் இந்தப் போராட்டம் எந்த அளவுக்கு தாக்குப் பிடிக்கும் என்பது தெரியவில்லை.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications