புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புதுச்சேரியில் 116 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம்... முதல்வர் நாராயணசாமி கடும் எதிர்ப்பு

Google Oneindia Tamil News

புதுச்சேரி: ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக ஜூன் 12-ம் தேதி புதுச்சேரியில் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என்று முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.

கூட்டணி கட்சிகளுடனான ஆலோசனைக்கு பின் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி இதனைத் தெரிவித்தார். மேலும், புதுச்சேரியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி வழங்க மாட்டேன் என்றார்.

Hydro carbon project in 116 places in Puducherry, Chief Minister Narayanasamy opposed

புதுச்சேரியில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை முழுமையாக எதிர்ப்போம். புதுச்சேரியில் 116 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க உள்ளதாக கடிதம் வந்துள்ளது. ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு புதுச்சேரி ஒத்துழைப்பு வழங்காது என பிரதமருக்கு கடிதம் எழுத உள்ளேன் என்றும் முதலமைச்சர் நாராயணசாமி கூறினார்.

தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் தொடங்கி நாகப்பட்டினம் மாவட்டம் வரையிலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு வேதாந்தா நிறுவனத்திற்கு அனுமதி அளித்துள்ளது.
இத்திட்டத்திற்கு தமிழகத்தில் எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தின் கீழ் தமிழகம், புதுச்சேரியில் 274 கிணறுகள் அமைக்கப்படவுள்ளது. இந்த கிணறுகள் ஒவ்வொன்றும் 3 ஆயிரத்து 500 மீட்டர் முதல் 4 ஆயிரத்து 500 மீட்டர் வரை ஆழம் கொண்டதாக இருக்கும். விழுப்புரத்தில் 139 சதுர கி.மீட்டருக்கு கிணறு வெட்ட நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி பிராந்தியத்தில் அரியாங்குப்பம் முதல் பனித்திட்டு வரையிலான கடற்கரையை ஒட்டிய பகுதியில்தான் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்காக 2 சதுர கி.மீட்டர் நிலம் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.

முன்னதாக நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரியில் மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் வேதாந்தா நிறுவனமோ அல்லது மத்திய அரசு இராணுவத்துடன் வந்தாலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எக்காலத்திலும் அனுமதிக்கப்போவதில்லை என்றும் உறுதிப்பட தெரிவித்தார்.

ஆட்சியை மத்திய அரசு கலைத்தாலும், மக்கள் நலனுக்காக முதல்வர் பதவியை தூக்கியெறிந்து மதச்சார்பற்ற அணியோடு இணைந்து ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராட தயாராக உள்ளதாகவும் அவர் கூறினார்.

English summary
Chief Minister Narayanasamy has said that human chain will be held in Puducherry on June 12 against the hydrocarbon project.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X