நாராயணசாமி முதல்வராக நீடிக்க தகுதியில்லை உடனே பதவி விலக வேண்டும் - அதிமுக எம்எல்ஏ அன்பழகன்
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உடனே பதவி விலக வேண்டும் என்று அதிமுக எம்எல்ஏ நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.
புதுச்சேரி: 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளதால் பெரும்பான்மையை இழந்துள்ள முதல்வர் நாராயணசாமி உடனே பதவி விலக வேண்டும் என புதுச்சேரி அதிமுக எம்எல்ஏ அன்பழகன் தெரிவித்துள்ளார். சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க நாராயணசாமி அரசுக்கு ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Recommended Video

சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் புதுச்சேரி அரசியல் களம் பரபரப்பாக மாறியுள்ளது.

புதுச்சேரியில் அதிருப்தி எம்எல்ஏக்கள் நமச்சிவாயம், தீப்பாய்ந்தான், மல்லாடி கிருஷ்ணாராவ் , ஜான்குமார்ஆகியோர் தங்கள் பதவியை அடுத்தடுத்து ராஜினாமா செய்துள்ளனர். சட்டசபையில் மொத்தம் உள்ள 30 இடங்களில் காங்கிரஸ் திமுக கூட்டணியின் பலம் 14 ஆக குறைந்துள்ளது.
பெரும்பான்மைக்கு 16 இடங்கள் தேவைப்படும் நிலையில் தற்போது காங்கிரஸ் கூட்டணிக்கு 14 இடங்கள் உள்ளதால் ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆளும் காங்கிரஸ் கட்சியில் இருந்து இதுவரை 4 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துள்ள நிலையில், நாராயணசாமி ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரியில் ஒட்டுமொத்த அமைச்சரவையை ராஜினாமா செய்ய முடிவு என தகவல் வெளியாகியுள்ளது.
புதுச்சேரி எம்எல்ஏக்கள் அமைச்சர்களுடன் முதல்வர் நாராயணசாமி அவசர ஆலோசனை நடத்துகிறார். ஆட்சியை கவிழ்க்கும் முன்பாக ராஜினாமா செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாம்.
எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளதால் திமுக காங்கிரஸ் கூட்டணி அரசு பெரும்பான்மையை இழந்து விட்டதாக அம்மாநில அதிமுக எம்எல்ஏ அன்பழகன் கூறியுள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அன்பழகன், புதுச்சேரி முதல்வராக நாராயணசாமி ஒரு நிமிடம் கூட நீடிக்க தகுதியற்றவர்.
எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து விட்டதால் தார்மீக பொறுப்பேற்று நாராயணசாமி ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அன்பழகன் வலியுறுத்தினார்.
துணை நிலை ஆளுநர் கிரண் பேடி தனக்குரிய அதிகாரத்தை பயன்படுத்தி சட்டசபையை கூட்டி நாராயணசாமி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
சட்டசபை தேர்தல் நெருங்கும் நேரத்தில் புதுச்சேரி மாநில அரசியல் களம் அனல் பறக்க ஆரம்பித்துள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications