புதுச்சேரியில் மார்ச் 1 ஆம் தேதி முதல் பிளாஸ்டிக்கிற்கு தடை... முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் மார்ச் 1 ஆம் தேதி முதல் பிளாஸ்டிக்கிற்கு தடை செய்யப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்க அமைச்சரவை முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை அமலில் உள்ள நிலையில், அதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து, புதுச்சேரியிலும் பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்கப்பட உள்ளது.

6 மாதங்கள் காலக்கெடு
புதுச்சேரியில் பிளாஸ்டிக் பை மற்றும் பொருட்கள் பயன்பாடு அதிகளவில் இருக்கிறது. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகமாக ஏற்படுகிறது. அத்துடன் கேடு அதிகளவில் ஏற்படுவதால் புதுச்சேரியில் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ய உள்ளோம் என்றும், இதையொட்டி தொழிற்சாலைகளுக்கு ஆறு மாதங்கள் காலக்கெடு தரப்படும் என்று கடந்த செப்டம்பர் மாதம் அமைச்சர் கந்தசாமி தெரிவித்திருந்தார்.

கடும் நடவடிக்கை
மேலும், பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்று ஏற்பாடுகள், ரசாயன கலப்பு இல்லாமல் மக்களுக்கு தேவையானவை செய்யப்படும். 6 மாதங்களுக்கு பின்னர் பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனை செய்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதற்கான அறிவிப்பு முறைப்படி வெளியிடப்படும் என்றும் தெரிவித்திருந்தார்

முதலமைச்சர் அறிவிப்பு
அதன்படி, ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்க அமைச்சரவை முடிவு எடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் மார்ச் 1 ஆம் தேதி முதல் பிளாஸ்டிக்கிற்கு தடை செய்யப்படும் என்று முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

பாஜக தர்ணா
முன்னதாக, தமிழகத்தை போலவே புதுவையிலும் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த மாதம் நடந்த சட்டசபை கூட்டத்தில், பாஜக மாநில தலைவரும், நியமன எம்.எல்.ஏ.யுமான சுவாமிநாதன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். பிளாஸ்டிக் தடையானது சுற்றுசூழலை பாதுகாக்கும், மழை நீரை சேகரித்து வைக்கும், எனவே புதுச்சேரியில் பிளாஸ்டிக் தடையை அமல்படுத்த வேண்டும் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு












Click it and Unblock the Notifications