புதுச்சேரியில் மார்ச் 1 ஆம் தேதி முதல் பிளாஸ்டிக்கிற்கு தடை... முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் மார்ச் 1 ஆம் தேதி முதல் பிளாஸ்டிக்கிற்கு தடை செய்யப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்க அமைச்சரவை முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை அமலில் உள்ள நிலையில், அதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து, புதுச்சேரியிலும் பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்கப்பட உள்ளது.

6 மாதங்கள் காலக்கெடு
புதுச்சேரியில் பிளாஸ்டிக் பை மற்றும் பொருட்கள் பயன்பாடு அதிகளவில் இருக்கிறது. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகமாக ஏற்படுகிறது. அத்துடன் கேடு அதிகளவில் ஏற்படுவதால் புதுச்சேரியில் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ய உள்ளோம் என்றும், இதையொட்டி தொழிற்சாலைகளுக்கு ஆறு மாதங்கள் காலக்கெடு தரப்படும் என்று கடந்த செப்டம்பர் மாதம் அமைச்சர் கந்தசாமி தெரிவித்திருந்தார்.

கடும் நடவடிக்கை
மேலும், பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்று ஏற்பாடுகள், ரசாயன கலப்பு இல்லாமல் மக்களுக்கு தேவையானவை செய்யப்படும். 6 மாதங்களுக்கு பின்னர் பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனை செய்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதற்கான அறிவிப்பு முறைப்படி வெளியிடப்படும் என்றும் தெரிவித்திருந்தார்

முதலமைச்சர் அறிவிப்பு
அதன்படி, ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்க அமைச்சரவை முடிவு எடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் மார்ச் 1 ஆம் தேதி முதல் பிளாஸ்டிக்கிற்கு தடை செய்யப்படும் என்று முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

பாஜக தர்ணா
முன்னதாக, தமிழகத்தை போலவே புதுவையிலும் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த மாதம் நடந்த சட்டசபை கூட்டத்தில், பாஜக மாநில தலைவரும், நியமன எம்.எல்.ஏ.யுமான சுவாமிநாதன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். பிளாஸ்டிக் தடையானது சுற்றுசூழலை பாதுகாக்கும், மழை நீரை சேகரித்து வைக்கும், எனவே புதுச்சேரியில் பிளாஸ்டிக் தடையை அமல்படுத்த வேண்டும் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்!












Click it and Unblock the Notifications