"துணை ஜனாதிபதி" பதவிக்கு கிரண்பேடி குறி.. தூக்கி எறிந்த பிரதமர்.. அடுத்து ஆர்.என்.ரவி.. மார்க்சிஸ்ட்
புதுச்சேரி: குடியரசுத் துணை தலைவர் பதவிக்கு ஆசைப்பட்டு செயல்பட்ட கிரண்பேடியை பிரதமர் மோடியும் அமித்ஷாவும் தூக்கி எறிந்ததுபோல் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியும் அவர்களால் தூக்கி எறியப்படுவார் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஜி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
புதுவை மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் சிறப்பு மாநாடு கம்பன் கலையரங்கத்தில் நடந்தது. இதில் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது இந்த விழாவில் ஜி ராமகிருஷ்ணன் பேசுகையில் சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகை தமிழக பாஜக அலுவலமாக செயல்படுகிறது. துணை குடியரசுத் தலைவர் பதவி கிடைக்கும் என்பதால் புதுவை துணை நிலை ஆளுநராக இருந்த கிரண்பேடி மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு எதிராக செயல்பட்டார்.

பிரதமர் மோடி
அவரை பிரதமர் மோடியும் அமித்ஷாவும் பதவியிலிருந்து மாற்றிவிட்டனர். அதாவது வேலை முடிந்தவுடன் கிள்ளுக்கீரை போல் தூக்கி வீசப்பட்டார் கிரண்பேடி. தற்போது அவர் என்ன செய்கிறார் என தெரியவில்லை. அவர் இருக்கும் இடம் கூட தெரியவில்லை. எந்த நிகழ்ச்சிகளிலும் பார்க்க முடிவதில்லை.

தமிழக ஆளுநர்
இது போன்ற ஒரு நிலை ஒரு நாள் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் ஏற்படும். அது போல் கேரள ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கு நடக்கும் என்றார். பின்னர் சீதாராம் யெச்சூரி பேசினார். அவர் பாஜக ஆட்சியில் உளள இடங்களில் எந்த ஒரு வளர்ச்சி திட்டமும் செயல்படுத்துவதில்லை. மொழி பிரச்சினையில் இந்திதான் என மத்திய அரசு வலியுறுத்துகிறது.

தாய்மொழி
ஆனால் அந்தந்த மாநில அரசுகள் தாய்மொழிதான் வேண்டும் என வலியுறுத்து வருகிறார்கள். எந்த மாநிலத்தின் அரசையும் அழைத்து ஆலோசிக்காமல் புதிய கல்வி கொள்கையை மத்திய அரசு அமல்படுத்தவுள்ளது. இது பாஜகவின் பாசிசம் அல்லாமல் வேறு என்ன? இந்த புதிய கல்விக் கொள்கையை நாங்கள் எதிர்ப்போம் என்றார்.

ஆளுநர்கள்- அரசுகள் மோதல்
தமிழகம், கேரளம் ஆகிய தென் மாநிலங்களில் ஆளுநர்களுக்கும் அரசுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. தமிழகத்தில் ஆளுநராக இருக்கும் ஆர்.என்.ரவி மாநில அரசு நிறைவேற்றும் மசோதாக்களை கிடப்பில் போட்டுள்ளதாக குற்றம்சாட்டப்படுகிறது. அது போல் கேரள அரசுக்கு எதிராக ஆளுநர் ஆரிப் முகமது கான் செயல்பட்டு வருகிறார். பல்கலைக்கழகங்களில் துணை வேந்தராக ஆளுங்கட்சி தரப்பு நியமனங்களுக்கு கேரள ஆளுநர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். அது போல் தெலுங்கானா அரசுக்கும் ஆளுநர் தமிழிசைக்கும் இடையே கடும் மோதல் உள்ளது. தெலுங்கானாவில் ஆளுநருக்கு உரிய மரியாதையை தரவில்லை என தமிழிசை தெரிவிக்கிறார்.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது?












Click it and Unblock the Notifications