புதுச்சேரி டூ கோவை.. பல கோடி மோசடி செய்த கும்பல்.. தமன்னா, காஜல் அகர்வால் குறித்து பரவிய தகவல்
புதுச்சேரி: நாடு முழுவதும் பல கோடி கிரிப்டோகரன்சி மோசடி செய்த கோவை இளைஞர்கள் இரண்டு பேரை புதுச்சேரி போலீசார் கைது செய்துள்ளனர்.இந்தவிவகாரத்தில் பெண்கள் உள்பட 10 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் கோவையில் மோசடி செய்த கிரிப்டோ கரன்சி நிறுவனத்தை திறந்து வைத்தது, மகாபலிபுரத்தில் 100 சொகுசு கார்களை முதலீட்டாளருக்கு வழங்கியதாக பிரபல நடிகைகள் தமன்னா, காஜல் அகர்வால் குறித்து பரவிய தகவல் உண்மையா என்பது தெரியவில்லை.. ஏனெனில் போலீசார் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடவில்லை
புதுச்சேரி லாஸ்பேட்டையை சேர்ந்தவர் அசோகன் . இவர் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இவரது ஓய்வு பெற்ற பிஎன்என்எல் அதிகாரியான அசோகனின் செல்போன் எண்ணுக்கு அண்மையில் ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அந்த மெசேஜில் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று கவர்ச்சிகரமாக கூறப்பட்டிருந்ததாம். இதனை நம்பிய ஓய்வு பெற்ற பிஎன்என்எல் அதிகாரியான அசோகன், குறுஞ்செய்தி வந்த எண்ணில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்

அப்போது அவர்கள் கூறியதன் படியே, கிரிப்டோ கரன்சியில் ரூ.98 லட்சத்தை பல்வேறு தவணைகளாக முதலீடு செய்தாராம் அசோகன். அதன் பின்னர் அவரது கணக்கில் ரூ.9 கோடி இருந்ததாக தெரிய வந்தது. ஆனால் அவர் தனது வங்கி கணக்கிற்கு மாற்ற முயற்சி செய்தார். ஆனால் முடியவில்லை. இதனால் அவர் அந்த நபரை தொடர் கொள்ள முயற்சித்துள்ளார். ஆனால் அந்த நபர் எடுக்கவில்லை. இதனால் தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்த அசோகன் இது குறித்து புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார்
அதன்பேரில் புதுச்சேரி போலீசார் தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தினார்கள். இதில் கோவையை தலைமை இடமாக கொண்டு செயல்படும் ஒரு கும்பல் இந்த மோசடியில் ஈடுபட்டதை கண்டுபிடித்தனர். இதனை தொடர்ந்து புதுச்சேரி தனிப்படை போலீசார் கோவைக்கு விரைந்து சென்று 36 வயதாகும் நித்தீஷ் ஜெயின் , 40 வயதாகும் அரவிந்த்குமார் ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.50 லட்சம் மதிப்புள்ள சொகுசு கார், பல்வேறு ஆவணங்களை பறிமுதல் செய்திருக்கிறார்.
இந்த வழக்கில் கோவையை சேர்ந்த தாமோதரன், நூர்முகமது, சந்தானம், இம்ரான்பாஷா, நந்தியப்பன், கணேசன், ஆலியா, ரேஷ்மா உள்பட சென்னை, பெங்களூரு பகுதியை சேர்ந்த 10 பேருக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.. இந்த கும்பல் கடந்த கடந்த 2022-ம் ஆண்டு கோவையில் ஆஷ்பே என்ற பெயரில் நிறுவனத்தை தொடங்கி இருக்கிறது அதன் தொடக்க விழாவில் நடிகை தமன்னா உள்ளிட்ட சினிமா பிரபலங்கள், தொழில் அதிபர்களை மோசடி நிறுவனத்தினர் பங்கேற்க வைத்ததாக தகவல் பரவியது.
3 மாதங்களுக்கு பிறகு மாமல்லபுரத்தில் சொகுசு விடுதியில் நடந்த விழாவில் பிரபல நடிகையான காஜல் அகர்வால் மூலம் தங்களிடம் முதலீடு செய்த 100 பேருக்கு கார்களை பரிசாக வழங்கி, அதிக முதலீட்டாளர்களை கவர்ந்ததாகவும் தகவல்கள் பரவியது. இதனால் உண்மை என்று நம்பி பலர் பணம் செலுத்தியதாகவும், இப்படி டெல்லி, ஒடிசா, மகாராஷ்டிரா உள்பட நாட்டின் பல்வேறு பகுதியில் ரூ.50 கோடி வரை மோசடி செய்திருப்பதாகவும் செய்திகள் பரவி வருகின்றன,
இந்த கும்பல் புதுச்சேரியைச் சேர்ந்தவர்களிடம் மட்டும் ரூ.3 கோடியே 60 லட்சம் மோசடி செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் 2 பெண்கள் உள்பட 10 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இதனிடையே கோவையில் கிரிப்டோ கரன்சி நிறுவன திறப்பு விழாவில் பங்கேற்ற தமன்னா, மாமல்லபுரத்தில் குறிப்பிட்ட நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கு சொகுசு கார்களை தரும் விளம்பரத்தில் கலந்து கொண்ட காஜல் அகர்வால் கொண்டதாக பரவும் தகவல்களின் உண்மை தன்மை குறித்து போலீசார் அதிகாரப்பூர்வமாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை.. ஆனால் ஊடகங்களில் பரவி வருகிறது.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications