சவுதி அரேபியா எண்ணெய் கிடங்கில்.. ஹவுதி கிளர்ச்சியாளர்கள் டிரோன் தாக்குதல்! பயங்கர தீ விபத்து
ரியாத்: சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் உள்ள எண்ணெய் கிடங்கு மீது ஏமன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது
ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியாவில் உள்ள எண்ணெய் கிடங்கில் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் இணையத்தில் வெளியாகி உள்ளது.

டிரோன் தாக்குதல்
உலகின் மிகப் பெரிய எண்ணெய் நிறுவனங்களில் ஒன்றான அரம்கோ செங்கடல் நகரில் பல சுத்திகரிப்பு நிலையங்களைக் கொண்டுள்ளது. இங்குள்ள சுத்திகரிப்பு நிலையங்களைக் குறிவைத்து, டிரோன் தாக்குதல் நடத்தியதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இந்தத் தாக்குதலில் யாராவது உயிரிழந்துள்ளனரா அல்லது காயமடைந்துள்ளனரா என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

ஹவுதி கிளர்ச்சியாளர்கள்
இந்தத் தாக்குதலுக்கு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பு ஏற்றுள்ளனர். இது தொடர்பாக ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாங்கள் ட்ரோன்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் பல தாக்குதல்களை நடத்தினோம். ஜெட்டாவில் அரம்கோ நிறுவல் (மற்றும்) ரியாத்தில் முக்கிய நிறுவனங்களைக் குறி வைத்துத் தாக்குதல் நடத்தி உள்ளோம்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபார்முலா 1 போட்டிகள்
வரும் மார்ச் 27ஆம் தேதி ஃபார்முலா 1 போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், போட்டி நடைபெறும் இடத்திற்கு மிக அருகில் இந்த டிரோன் தாக்குதல் நடந்துள்ளது. ஃபார்முலா 1 போட்டி நடைபெறும் இடத்திற்கு மிக அருகில் கரும் புகையுடன் தீ கொழுந்துவிட்டு எரியும் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. ஃபார்முலா 1 போட்டியின் பயிற்சி ஒட்டம் இன்று நடைபெற்ற நிலையில், அந்தச் சமயத்தில் தான் இந்த டிரோன் தாக்குதல் நடந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

பெரும் தீ விபத்து
இந்தச் சம்பவம் தொடர்பாக சவூதி அரேபியாவின் அரசு எண்ணெய் நிறுவனமும், அரசு ஊடகமும் இதுவரை எந்தவொரு தகவலையும் வெளியிடவில்லை. ஜெட்டா எண்ணெய் கிடங்கில் இதேபோன்ற தாக்குதல் நடத்தப்பட்ட சில நாட்களில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தத் தாக்குதலால் வடக்கு ஜெட்டா பல்க் ஆலையில் தீப்பற்றி எரிந்து நிலையில், தீயணைப்பு வீரர்கள் அதை அணைத்துள்ளனர். சவுதி அரேபியா இதுவரை நடந்த தாக்குதல்களுக்கு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பு ஏற்றுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications