பாரதமாதா ஆலய பூட்டு உடைப்பு! பாஜகவின் கேபி.ராமலிங்கத்துக்கு நெஞ்சு வலி! 15 நாட்கள் நீதிமன்ற காவல்
சேலம்: பாரத மாதா ஆலயப் பூட்டை உடைத்த விவகாரத்தில் பாஜக மாநிலத் துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கத்தை சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, பாஜக சார்பில் பாத யாத்திரை நடைபெற்றது. இதில் பாஜக மாவட்டத் தலைவர் பாஸ்கர் , முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.பி.ராமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பாப்பாரப்பட்டி பழைய பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாக வந்து அவர்கள் சுப்பிரமணிய சிவா நினைவிடத்தில் அமைந்துள்ள பாரதமாதா நினைவாலயத்தில் மாலை அணிவிக்க முற்பட்டனர்.

சிலை
இருப்பினும், பாரதமாதா நினைவாலயத்தின் கதவுகள் பூட்டப்பட்டு இருந்த நிலையில் கண்காணிப்பாளரிடம் கதவைத் திறக்கும்படி வலியுறுத்தினர். இருப்பினும், அவர் அதிகாரிகளிடம் கேட்ட கதவைத் திறக்க முடியும் எனக் கூறிவிட்டதாகத் தெரிகிறது. இதனிடையே கதவின் பூட்டை உடைத்து பாஜகவினர் உள்ளே சென்று பாரதமாதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உள்ளனர்.

கைது
இந்த விவகாரத்தில் பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் உள்ளிட்டோர் 14ஆம் தேதி காலை ராசிபுரத்தில் பென்னாகரம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து மருத்துவ பரிசோதனைக்காக கே.பி.ராமலிங்கம் தர்மபுரி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அப்போது அவர் தனக்கு ரத்தக் கொதிப்பு, நெஞ்சுவலி உள்ளிட்ட உடல் பிரச்சினைகள் இருப்பதாக போலீசாரிடம் தெரிவித்தார்.

சிகிச்சை
இதையடுத்து மேல் சிகிச்சைக்காக அவர் ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டார். அங்கு மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு கே பி ராமலிங்கம் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து பாதுகாப்பு கருதி மருத்துவமனையில் போலீசார் அங்குக் குவிக்கப்பட்டு உள்ளனர். இந்தச் சூழலில் நேற்று மாலை சேலம் அரசு மருத்துவமனைக்கு வந்த பெண்ணாகரம் மேஜிஸ்டேட் பிரவீனா கேபி ராமலிங்கத்தின் உடல்நலம் குறித்துக் கேட்டறிந்தார்.

நீதிமன்ற காவல்
இதையடுத்து அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து சிறைத்துறை காவர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். தற்போது சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர், வரும் ஆகஸ்ட் 29 வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
-
தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்! -
நீங்க கிளம்புங்க அண்ணாச்சி.. நயினாருக்கு டெல்லி தந்த ஷாக்! நாற்காலிக்கு சண்டை போடும் தாமரை சொந்தங்கள் -
திராவிட நடுக்கம்! அண்ணாமலையின் வலையில் விழும் திமுக, அதிமுக புள்ளிகள்.. களமிறங்கும் மாஜி IAS, IPS! -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி'












Click it and Unblock the Notifications