வெளுத்த கன மழை.. ஏற்காட்டில் நிலச்சரிவு.. பெரும் போக்குவரத்து பாதிப்பு
சேலம்: ஏற்காட்டில் ஏற்பட்ட நில சரிவால் சாலையில் சரிந்த பாறையை வெடி வைத்து அப்புறப்படுத்துவதால் மலைப் பாதையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, சென்னை உட்பட பல பகுதிகளில் மழை பெய்தன. சேலம் மாவட்டம் ஏற்காட்டிலும் கன மழை கொட்டியது.

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் நேற்று இரவு பெய்த தொடர் மழையால் ஏற்காடு, மலை பாதையில் உள்ள 60 அடி பாலம் அருகில் நிலச்சரிவு ஏற்பட்டு இரண்டு ராட்சத பாறைகள் சாலையில் விழுந்தன.
சம்பவமறிந்து அங்கு சென்ற நெடுஞ்சாலை துறையினர் நேற்று இரவு தற்காலிகமாக சாலையை சரி செய்து போக்குவரத்து சரி செய்யப்பட்டது.
பின்னர் இன்று காலை அந்த பாறையை அகற்றும் பணியை நெடுஞ்சாலை துறையினர் மற்றும் காவல்துறையினர் இணைத்து செய்துவருகின்றனர். அதன் ஒருபகுதியாக அந்த பாறையை கப்ரஸர் உதவியுடன் துளையிட்டு வெடி வைத்து அகற்றும் பணி மிகவும் தீவிரமாக நடந்து வருகிறது.
அதன் காரணமாக பாறைக்கு வெடி வைப்பதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு பாதிப்பு எந்த வித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க ஏற்காட்டில் இருந்து மலைப்பாதை வழியாக சேலம் செல்லும் வாகனகள் ஏற்காடு 20வது கொண்டாய் ஊசி வளைவு அருகிலும் , சேலத்தில் இருந்து ஏற்காடு வரும் வாகனகள் அனைத்தும் ஏற்காடு அடிவாதத்தில் உள்ள காவல் சோதனை சாவடியிலும் காவல் துறையினர் தடுத்து நிறுத்தி வைத்துள்ளனர்.
இதன் காரணமாக இந்த இரு இடங்களிலும் ஏகப்பட்ட வாகனகள் சுமார் 3 மணி நேரமாக நின்று கொண்டிருந்தது. மேலும் வாகனகள் தடுத்து நிறுத்தபட்டுள்ளதால் அங்கு பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வெடி வைத்து பாறை தகர்க்கப்பட்டதும் வாகனகள் மலைப்பாதையில் செல்ல அனுமதிக்கப்படும் என்று காவல் துறையினர் கூறினார்.












Click it and Unblock the Notifications