இவர் தான் சேலம் ராதா.. பார்க்க அப்பாவி போல் நடித்து.. தமிழ்நாடே தேடும் கேடித்தனம்.. மிரண்ட போலீஸ்
சேலம்: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே நகைக்கடையில் போலி நகையை கழற்றி வைத்துவிட்டு, 7½ பவுன் தங்க சங்கிலியை லாவகமாக திருடி சென்ற பெண்ணை போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து கைது செய்தனர்.
திருடுவோரை கண்டுபிடிக்க என்னதான் சிசிடிவி காட்சிகள், தெருவுக்கு தெரு கேமராக்கள், போலீஸ் கண்காணிப்பு, பொதுமக்களிடையே விழிப்புணர்வு இருந்தாலும், திருடும் கூட்டம் திருடிக் கொண்டுதான் இருக்கிறது.

மக்கள் அசந்த நேரத்தில் பிட்பாக்கெட் அடிக்கும் கும்பல், லாவகமாக நகைகளையும் கூட்டத்தில் திருடுகின்றன. தமிழ்நாட்டின எந்த பேருந்து நிலையங்களுக்கு சென்றாலும் போட்டோக்களை மாற்றி, இவர்கள் வருவார்கள்.. ஜாக்கிரத்தையாக இருங்கள் மக்களே.. கண் அசரும் நேரத்தில் திருடுவார்கள் என்று கூறி பதாகை வைத்திருப்பார்கள். ஆனாலும் திருடுவதை சர்வ சாதாரணமாக மேற்கொள்ளும் கும்பல் சிசிடிவி காட்சிகளில் கூட மண்ணை அள்ளிப்போட பல வேலைகளை செய்கிறது. அதேநேரம் என்ன தான் திருடி தப்பித்தாலும் ஒரு நாள் அந்த கும்பல் போலீசிடம் சிக்கி கொள்கிறது.
திருடுவதில் சில ஆண்கள் மட்டுமல்ல.. சில பெண்களுமே சர்வ சாதாரணமாக வித்தகர்களாக இருக்கிறார்கள். பார்க்க அப்பாவி போல் இருக்கும் சில பெண்கள், கண் இமைக்கும் நேரத்தில் காரியத்தை முடித்துவிட்டு எஸ்கேப் ஆகிறார்கள்.. அப்படி கம்பி நீட்டிய ஒரு பெண்ணைதான் சேலம் மாவட்டம் வாழப்பாடி போலீசார் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பேளூரில் தனியார் நகைக்கடைக்கு பர்தா அணிந்து சென்றுள்ளார் பெண் ஒருவர். அவர் போலி நகைகளை கழற்றி கொடுத்து விட்டு 7½ பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றுள்ளார். இதுதொடர்பான புகாரின் பேரில் வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்துள்ளனர்.
கடையில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், பர்தா அணிந்து வந்த பெண், சீலநாயக்கன்பட்டி மதுரை வீரன் கோவில் தெரு பகுதியை சேர்ந்த மதன் மனைவி ராதா (வயது 35) என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இதேபாணியில் பர்தா அணிந்து நகைகளை திருடி வந்திருக்கிறார். அதுதொடர்பாக பல்வேற போலீஸ் நிலையங்களில் வழக்கு நிலுவையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. கைதான ராதாவை வாழப்பாடி போலீசார் சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications