"அலட்சியம்".. பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட பெண்.. தவறான ஊசியால் பறிபோன கண்.. சேலத்தில் ஷாக்!
சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு தவறான ஊசி செலுத்தப்பட்டதால் ஒரு கண்ணையே அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மருத்துவர்களின் இந்த அலட்சியப்போக்கை கண்டித்து சேலம் அரசு மருத்துவமனை முன்பு அப்பெண்ணின் உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஏழை எளிய மக்கள் நாடி வரும் அரசு மருத்துவமனை இந்த அளவுக்கு அலட்சியப்போக்கில் செயல்படுவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்
சேலம் மாவட்டம் நங்கவள்ளி ஒன்றியம் சின்னனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மனைவி சத்யா (29). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு கடந்த அக்டோபர் 31-ம் தேதி பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சேலம் அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டில் சத்யா அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர், நவம்பர் 4-ம் தேதி அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

கையில் நரம்பு ஊசி
குழந்தை பிறந்ததற்கு பிறகு சத்யாவுக்கு சத்து ஊசியும், வலது கையில் நரம்பு ஊசியும் போடப்பட்டிருக்கிறது. இதில் சில நிமிடங்களிலேயே சத்யாவின் வலது கண்ணில் வீக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை உட்பட உறவினர்கள் சிலர், அரசு மருத்துவமனை மருத்துவரை சந்தித்து, சத்யாவுக்கு தவறான ஊசி போட்டதால் கண்ணில் வீக்கம் ஏற்பட்டிருப்பதாக தெரிவித்தனர்.

கண் அகற்றம்
மேலும், சத்யாவை டிஸ்சார்ஜ் செய்யுமாறும், தனியார் மருத்துவமனையில் அனுமதித்துக் கொள்கிறோம் எனவும் அவர்கள் கூறியுள்ளனர். ஆனால், சத்யாவை மருத்துவர்கள் டிஸ்சார்ஜ் செய்ய மறுத்து, அங்கே வைத்து சிகிச்சை அளித்துள்ளனர். இந்நிலையில், கடந்த 12-ம் தேதி சத்யாவுக்கு கண் பார்வை போயுள்ளது. இதன் பிறகு, அவரை மருத்துவர்கள் டிஸ்சார்ஜ் செய்ததும், அவரது உறவினர்கள் தனியார் மருத்துவனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவரது கண்ணை பரிசோதித்த மருத்துவர்கள், கண்ணை அகற்றவில்லை என்றால் உயிருக்கு ஆபத்து எனக் கூறி கண்ணை அகற்றியுள்ளனர்.

ஆவேசம் - போராட்டம்
இதனால் ஆவேசம் அடைந்த சத்யாவின் உறவினர்கள், சேலம் அரசு மருத்துவமனையில் தவறான ஊசி போட்ட மருத்துவரை விசாரித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரும் போராட்டத்தில் குதித்தனர். ஒருகட்டத்தில், அவர்கள் சேலம் அரசு மருத்துவமனைக்குள் நுழைய முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர். சத்யாவின் உறவினர்களிடம் போலீஸாரும், மருத்துவர்களும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications