"அலட்சியம்".. பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட பெண்.. தவறான ஊசியால் பறிபோன கண்.. சேலத்தில் ஷாக்!
சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு தவறான ஊசி செலுத்தப்பட்டதால் ஒரு கண்ணையே அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மருத்துவர்களின் இந்த அலட்சியப்போக்கை கண்டித்து சேலம் அரசு மருத்துவமனை முன்பு அப்பெண்ணின் உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஏழை எளிய மக்கள் நாடி வரும் அரசு மருத்துவமனை இந்த அளவுக்கு அலட்சியப்போக்கில் செயல்படுவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்
சேலம் மாவட்டம் நங்கவள்ளி ஒன்றியம் சின்னனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மனைவி சத்யா (29). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு கடந்த அக்டோபர் 31-ம் தேதி பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சேலம் அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டில் சத்யா அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர், நவம்பர் 4-ம் தேதி அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

கையில் நரம்பு ஊசி
குழந்தை பிறந்ததற்கு பிறகு சத்யாவுக்கு சத்து ஊசியும், வலது கையில் நரம்பு ஊசியும் போடப்பட்டிருக்கிறது. இதில் சில நிமிடங்களிலேயே சத்யாவின் வலது கண்ணில் வீக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை உட்பட உறவினர்கள் சிலர், அரசு மருத்துவமனை மருத்துவரை சந்தித்து, சத்யாவுக்கு தவறான ஊசி போட்டதால் கண்ணில் வீக்கம் ஏற்பட்டிருப்பதாக தெரிவித்தனர்.

கண் அகற்றம்
மேலும், சத்யாவை டிஸ்சார்ஜ் செய்யுமாறும், தனியார் மருத்துவமனையில் அனுமதித்துக் கொள்கிறோம் எனவும் அவர்கள் கூறியுள்ளனர். ஆனால், சத்யாவை மருத்துவர்கள் டிஸ்சார்ஜ் செய்ய மறுத்து, அங்கே வைத்து சிகிச்சை அளித்துள்ளனர். இந்நிலையில், கடந்த 12-ம் தேதி சத்யாவுக்கு கண் பார்வை போயுள்ளது. இதன் பிறகு, அவரை மருத்துவர்கள் டிஸ்சார்ஜ் செய்ததும், அவரது உறவினர்கள் தனியார் மருத்துவனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவரது கண்ணை பரிசோதித்த மருத்துவர்கள், கண்ணை அகற்றவில்லை என்றால் உயிருக்கு ஆபத்து எனக் கூறி கண்ணை அகற்றியுள்ளனர்.

ஆவேசம் - போராட்டம்
இதனால் ஆவேசம் அடைந்த சத்யாவின் உறவினர்கள், சேலம் அரசு மருத்துவமனையில் தவறான ஊசி போட்ட மருத்துவரை விசாரித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரும் போராட்டத்தில் குதித்தனர். ஒருகட்டத்தில், அவர்கள் சேலம் அரசு மருத்துவமனைக்குள் நுழைய முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர். சத்யாவின் உறவினர்களிடம் போலீஸாரும், மருத்துவர்களும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications