குழந்தைகள் மத்தியில் அதிவேகமாக பரவும்.. B.1.617 இரட்டை மரபணுமாறிய கொரோனா..பள்ளிகளை மூடிய சிங்கப்பூர்
சிங்கப்பூர்: இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட B.1.617 கொரோனா குழந்தைகள் மத்தியில் அதிகம் பரவுவதால், பள்ளி மற்றும் கல்லூரிகளை மூட சிங்கப்பூர் அரசு முடிவு செய்துள்ளது.
சிங்கப்பூர் நாட்டில் பல மாதங்களுக்குப் பிறகு நேற்று 38 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. கடந்த எட்டு மாதங்களில் தினசரி கொரோனா பாதிப்புகளில் இதுதான் அதிகமாகும்.
இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட இந்த கொரோனா வகை தற்போது சிங்கப்பூரிலும் பரவி வருகிறது. இந்த B.1.617 உருமாறிய கொரோனா காரணமாக வைரஸ் பரவல் அதிகரித்திருக்கலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

பள்ளி கல்லூரிகள் மூடல்
இந்நிலையில், சிங்கப்பூர் நாட்டில் பள்ளிகள் மற்றும் ஜூனியர் கல்லூரிகளை மூடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீதமிருக்கும் இந்த கல்வியாண்டு முழுவதும் ஆன்லைன் வழியே மாணவர்களுக்குப் பாடங்கள் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் தினசரி கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், சிங்கப்பூர் இந்த முடிவை எடுத்துள்ளது.

குழந்தைகளை தாக்குகிறது
இது குறித்து அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் ஓங் யே குங் கூறுகையில், இந்த B.1.617 உருமாறிய கொரோனா குழந்தைகளை அதிகம் பாதிக்கும் என்று தோன்றுகிறது. இந்த உருமாறிய கொரோனாவில் சில வகைகள் வேகமாகப் பரவுகின்றன. அதேபோல குழந்தைகளையும் இவை அதிகமாகத் தாக்குகின்றன. இது பெரும் கவலையளிக்கும் விஷயமாக மாறியுள்ளது" என்றார்.

கொரோனா தடுப்பூசி
தற்போது வரை உள்ள தடுப்பூசிகள் அனைத்தும் 18+ வயதினருக்கு மட்டுமே அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சூழ்நிலையில், B.1.617 உருமாறிய கொரோனா குழந்தைகளை அதிகம் பாதிக்க வாய்ப்புள்ளதாகச் சிங்கப்பூர் குறிப்பிட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 16 வயதுக்குக் குறைவானவர்களுக்குத் தடுப்பூசிகளைச் செலுத்துவது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக சிங்கப்பூர் சுகாதார துறை அமைச்சர் குறிப்பிட்டார்.

கட்டுப்பாடுகள் அதிகரிப்பு
ஒரே நாளில் 38 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து சிங்கப்பூர் நாட்டில் ஊரடங்கு விதிகளில் மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. பொது இடங்களில் மக்கள் ஒன்றுகூட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல உணவகங்களில் பார்சல் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. சிங்கப்பூர் விமான நிலையத்தில் பயணிகளைத் தவிர மற்றவர்கள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரசுக்கு எதிராகத் தொடக்கம் முதலே சிங்கப்பூர் அதி தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications