இந்தியர்களுக்கு தான் சிக்கல்! சிங்கப்பூர் போட்ட உத்தரவு! இனி சின்ன விஷயத்துல கூட தப்பு இருக்க கூடாது
சிங்கப்பூர்: சிங்கப்பூருக்குச் செல்லும் இந்தியர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், அந்நாட்டு அரசு முக்கியமான ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு காரணமாகச் சிங்கப்பூருக்கு விமானம் ஏறும் முன்பே ஒருவர் தடுத்து நிறுத்தப்படலாம். அது என்ன உத்தரவு.. இதில் இருந்து தப்பிக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்!
இப்போது இந்தியப் பயணிகளுக்கு வெளிநாட்டுப் பயணம் முன்பைவிட எளிதாகிவிட்டது. ஒரு 10 நாள் லீவு கிடைத்தாலும் வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்லும் பழக்கம் அதிகரித்துவிட்டது. அப்படி இந்தியர்கள் விரும்பி செல்லும் வெளிநாடுகளில் ஒன்றாகச் சிங்கப்பூர் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் பேர் சிங்கப்பூருக்கு செல்கிறார்கள்.

சிங்கப்பூர்
ஆனால், கடந்த ஜனவரி 30ம் முதல் சிங்கப்பூர் பயணம் செய்வோர் ஒரு கூடுதல் சோதனையை எதிர்கொள்ள நேரிடும். இது நீங்கள் சிங்கப்பூர் செல்ல விமானம் ஏறுவதற்கு முன்பே ஆரம்பித்துவிடும். சிங்கப்பூரின் குடிவரவு மற்றும் சோதனை ஆணையம் NBD எனப்படும் "பயணம் தடை உத்தரவு" (No-Boarding Directive) முறையை அறிமுகப்படுத்தியதே இதற்குக் காரணம்.
இதன் மூலம் சிங்கப்பூரில் நுழையத் தகுதி பெறாத பயணிகளை, அவர்கள் விமானம் ஏறுவதற்கு முன்பே தடுத்து நிறுத்த முடியும். அதாவது ஒருவர் சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லவிருக்கிறார் என்றால் அவரிடம் உரிய டாக்குமென்ட் இல்லை என்று சிங்கப்பூர் அரசு கருதினால்.. அவர் சென்னை விமான நிலையத்தில் இருக்கும் சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்தின் செக்-இன் கவுன்டரிலேயே தடுத்து நிறுத்தப்படுவார்.
அதிகாரம்
சிங்கப்பூருக்கு வரத் தகுதி பெறாத பயணிகளை ஏர்போர்ட்டிலேயே தடுத்து நிறுவனம் அதிகாரத்தையே இந்த என்பிடி விமான நிறுவனங்களுக்கு வழங்குகிறது. சாங்கி விமான நிலையம் மற்றும் செலட்டர் விமான நிலையத்திற்குச் செல்லும் அனைத்து விமானங்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும்.
அதாவது சிங்கப்பூருக்கு வரும் பயணிகள் குறித்த விவரங்களை ஏர்லைன்கள் சிங்கப்பூர் அரசுக்கு அனுப்பும். ஒரு பயணியைத் தகுதியற்றவராகவோ அல்லது அதிக ஆபத்துள்ளவராகவோ சிங்கப்பூர் ஐ.சி.ஏ கருதினால், அவரை தடுத்து நிறுத்துமாறு உத்தரவு நேரடியாக விமான நிறுவனத்திற்கு அனுப்பப்படும். ஒருமுறை உத்தரவு பிறப்பிக்கப்பட்டால், அந்தப் பயணியை விமான நிறுவனங்கள் விமானத்தில் ஏற அனுமதிக்காது. முன்பு, இதுபோன்ற சோதனை சிங்கப்பூரில் விமானம் தரையிறங்கிய பிறகே மேற்கொள்ளப்படும். இப்போது இந்த செயல்முறை புறப்படும் விமான நிலையத்திற்கே மாற்றப்பட்டுள்ளது.
என்ன நடக்கும்
பயணிகளின் தகவல்களை, அதாவது விமானப் பயணிகள் பட்டியல், சிங்கப்பூர் வருகை அட்டை (SG Arrival Card) விவரங்கள், பாஸ்போர்ட் மற்றும் விசா தரவுகள், கடந்த காலக் குடிவரவு அல்லது பாதுகாப்பு தொடர்பான தடைகள் குறித்த விவரங்களை விமான நிறுவனங்கள் சிங்கப்பூரின் ஐ.சி.ஏ-வுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும். அவற்றை விமானம் கிளம்பும் முன்பே ஐ.சி.ஏ ஆய்வு செய்யும். எதாவது சிக்கல் கண்டறியப்பட்டால் உடனடியாகத் தடுத்து நிறுத்த உத்தரவிடப்படும். அதேபோல எதாவது சந்தேகம் இருந்தாலும் கூடக் கூடுதல் சோதனை செய்யவும் உத்தரவிடப்படும்.
சரியான விசா இல்லாதது, ஆறு மாதங்களுக்கும் குறைவாகச் செல்லுபடியாகும் பாஸ்போர்ட் உடன் பயணிப்பது, பிழையான அல்லது விடுபட்ட சிங்கப்பூர் வருகை அட்டை சமர்ப்பிப்பது உள்ளிட்ட காரணங்களால் தடை உத்தரவு பிறப்பிக்கப்படலாம். அத்துடன், முந்தைய பயணத்தின்போது ஏற்பட்ட சிக்கல்கள், தடை செய்யப்பட்ட நபராக அறிவிக்கப்பட்டோரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். சிறிய ஆவணப் பிழைகளால் கூட உங்கள் சிங்கப்பூர் பயணம் தடைபடலாம்!
இந்தியர்களே கவனம்
சிங்கப்பூருக்குச் செல்லும் இந்தியப் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், இந்தியர்களும் தங்கள் பயணத்தைத் திட்டமிட வேண்டும். விமானத்தில் புறப்படும் முன், தங்கள் பாஸ்போர்ட் குறைந்தது 6 மாதக் காலம் வேலிடிட்டியை கொண்டுள்ளது, விசாக்களுக்கு முன்கூட்டியே விண்ணப்பிப்பது, சிங்கப்பூர் வருகை அட்டையைத் துல்லியமாக நிரப்பிச் சமர்ப்பிப்பது ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும்.
அதேநேரம் ஒரு முறை தடை வந்தால் அது நிரந்தரத் தடை என்று அர்த்தமல்ல. தங்களுக்கு விதிக்கப்பட்ட தடை தவறானது எனப் பயணிகள் கருதினால் கடிதம் மூலம் ஒப்புதலைப் பெற விண்ணப்பிக்கலாம். அனுமதி கிடைத்த பின்னர் மீண்டும் சிங்கப்பூருக்குச் செல்லலாம்.
-
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அதிரடியாக குறைத்த மத்திய அரசு! விலை குறையுமா? விவரம் -
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா!












Click it and Unblock the Notifications