"அண்ணியுடன்" பாக்கியராஜ்.. கண்ணால் பார்த்துவிட்டு அதிர்ச்சியில் உறைந்த புதுமணப்பெண்.. சிவகங்கை ஷாக்
அண்ணியுடன் கணவன் உறவு வைத்திருந்ததால், மணப்பெண் தற்கொலை செய்து கொண்டார்
சிவங்கை: அண்ணியுடன் கணவன் ஒன்றாக இருப்பதை பார்த்துவிட்டு, புழுவாய் துடித்துபோய்விட்டார் புதுமணப்பெண் கவுசல்யா.. வெறும் 19 வயசுதான்.. இறுதியில் அநியாயமாக கவுசல்யாவின் உயிர் போய்விட்டது!
சிவகங்கை மாவட்டம் நன்னியாவூரைச் சேர்ந்தவர்தான் கவுசல்யா.. 19 வயது பெண்.. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வாகவயல் என்ற கிராமத்தை சேர்ந்த பாக்கியராஜுக்கு கவுசல்யாவை அவரது வீட்டில் கல்யாணம் செய்து தந்தனர்.
பாக்யராஜுக்கோ வயசு 32 ஆகிறது.. கடந்த ஜூலை மாதம்தான் கல்யாணம் நடந்துள்ளது.. பல கனவுகளுடன் அந்த வீட்டில் காலடி எடுத்து வைத்தார் கவுசல்யா.. ஆர்எஸ் மங்கலம் பெருமாள் கோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டிலும் குடியேறினர்.

சடலம்
இந்நிலையில், செப்டம்பர் 30-ம் தேதி கவுசல்யா வீட்டில் சடலமாக கிடந்தார்.. அப்போது வீட்டில் யாருமே இல்லை.. பாக்கியராஜ் வெளியூருக்கு சென்றுவிட்டார்.. தூக்கில் தொங்கி கொண்டிருந்த கவுசல்யாவின் மரணம் குறித்து போலீசாருக்கு தகவல் எட்டியது.. விரைந்து வந்த அவர்கள் சடலத்தை மீட்டனர்.. கவுசல்யாவின் கை, காலெல்லாம் ரத்தம் வழிந்து கிடந்தது.. அந்த ரத்தம் வீட்டின் சுவற்றிலும் தெறித்து விழுந்திருந்தது.

விசாரணை
பலவித சந்தேகங்களை கவுசல்யாவின் மரணம் ஏற்படுத்தியது.. கணவனும் இந்த நேரத்தில் ஊரில் இல்லை.. அதனால் இது கொலையா? தற்கொலையா என்ற ரீதியில் விசாரணையும் துரிதமானது.. கிட்டத்தட்ட கவுசல்யா இறந்து ஒன்றரை மாசம் கழித்துதான் உண்மை அம்பலமானது.. இதில் சம்பந்தப்பட்டவர் பாக்கியராஜும், அவரது அண்ணி ஜோதியும்தான்.

சந்தேகம்
பாக்கியராஜின் அண்ணன் குமார் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார்.. அதனால் ஜோதி, தன்னுடைய 2 குழந்தைகளுடன் கணவன் வீட்டில் வசித்து வருகிறார்... அதேவீட்டில்தான் கல்யாணமாகாத பாக்கியராஜும் இருந்திருக்கிறார்.. இவர்களுக்குள் நெருக்கம் இருந்திருக்கிறது.. கவுசல்யா கல்யாணம் ஆகி, இந்த வீட்டுக்குள்தான் வந்தார். ஒருநாள் இந்த கள்ள ஜோடி ஒன்றாக இருப்பதை கவுசல்யா கண்ணால் பார்த்துவிட்டு அதிர்ந்துபோனார்.

வரதட்சணை
கதறி கதறி அழுதார்.. கணவனிடம் இதை பற்றி கேட்டதற்கு, கல்யாணத்துக்கு முன்பே உறவு இருந்தது,அதையெல்லாம் அவ்வளவு சீக்கிரம் விட முடியாது என்று அசால்ட்டாக சொன்னார். இதுதான் தம்பதிக்குள் தகராறாக தினம்தோறும் வந்துள்ளது.. தன்னுடைய தவறை மறைக்க, வரதட்சணை பிரச்சனையை கிளப்பினார் பாக்கியராஜ்.

ரத்தம்
மீதி தர வேண்டிய நகையை வாங்கி வரும்படி, கவுசல்யாவை அவரது அம்மா வீட்டிற்கு திட்டி அனுப்பி வைத்துவிடுவார்... இதையெல்லாம் பார்த்துதான் 19 வயது கவுசல்யா நொந்து போனார்.. கடுமையான மனஉளைச்சலுக்குள்ளான கவுசல்யா, தற்கொலை செய்ய முடிவெடுத்தார்.. அதனால் கத்தியால் கைகளை அறுத்து கொண்டார்.. ரத்தம் கொட்டியதே தவிர, உயிர் போகவில்லை.

கள்ளஜோடி
அதனால் ஃபேனில் தூக்கு போட்டுக் கொண்டு தொங்கிவிட்டார்.. இவ்வளவும் விசாரணையில் தெரிய வந்ததையடுத்து, ஆர்எஸ் மங்கலம் போலீசார் அந்த கள்ளஜோடியை கைது செய்து ஜெயிலில் அடைத்திருக்கிறார்கள். கல்யாணம் ஆன 2 மாசத்தில் ஒரு அப்பாவி பெண்ணின் உயிர் பறிபோனதும், ஒன்றரை மாதம் கழித்து இந்த மரணத்தின் முடிச்சு அவிழ்க்கப்பட்டுள்ளதும் சிவகங்கையில் பரபரப்பை தந்து வருகிறது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications