துணை கேப்டனுக்கே பெஞ்ச்.. வாஷிங்டன் சுந்தரை களமிறக்க வேண்டிய காரணம் என்ன? பின்னணி
அகமதாபாத்: நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் குல்தீப் யாதவ்க்கு ஓய்வு அளிக்கப்பட்டு அர்ஷ்தீப் சிங் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் துணைக் கேப்டன் அக்சர் படேல் பெஞ்ச் செய்யப்பட்டு வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடரில் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. ஏற்கனவே இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிவிட்ட சூழலில், இது சம்பிரதாய ஆட்டமாக அமைந்துள்ளது. இருந்தாலும் இதே அகமதாபாத் மைதானத்தில் தான் இந்திய அணி சூப்பர் 8 சுற்றில் தென்னாப்பிரிக்கா அணியை எதிர்கொள்ள உள்ளது.

இதனால் அகமதாபாத் மைதானத்தை நன்றாக புரிந்து கொள்ள இந்த ஆட்டம் சிறந்த வாய்ப்பாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இந்த பிட்சில் பனிப்பொழிவு அதிகமிருக்கும் என்பதால், பவுலர்களுக்கு கொஞ்சம் சவால் அளிக்கலாம் என்று முடிவு எடுத்ததாக கூறி இருக்கிறார்.
அதேபோல் இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. குல்தீப் யாதவ் பெஞ்ச் செய்யப்பட்டு அர்ஷ்தீப் சிங்கும், துணைக் கேப்டன் அக்சர் படேலுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு வாஷிங்டன் சுந்தரும் சேர்க்கப்பட்டுள்ளனர். இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் அக்சர் படேலின் சொந்த மைதானம் இது.
இருப்பினும் காயத்தில் இருந்து வந்துள்ள வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு வழங்க வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இதற்கு கம்பீரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையே காரணமாக அமைந்துள்ளது. ஏனென்றால் வருண் சக்கரவர்த்தி மற்றும் அக்சர் படேல் ஸ்பின்னர்களாக இருக்கின்றனர். 3வது ஸ்பின்னர் தேவைப்பட்டால், குல்தீப் யாதவை சேர்க்க வேண்டிய சூழல் உள்ளது.
ஒருவேளை பாகிஸ்தான் அணியுடன் அரையிறுதி அல்லது இறுதிப் போட்டியில் மோத வேண்டிய சூழல் ஏற்பட்டால், 3 ஸ்பின்னர்கள் கண்டிப்பாக தேவை. இதனால் ஒரு பேட்ஸ்மேனை இழக்க வேண்டிய சூழல் ஏற்படும். அதற்கு பதிலாக வாஷிங்டன் சுந்தரை பிளேயிங் லெவனில் சேர்த்தால் நம்பர் 9 வரை பேட்டிங் வரிசை நீண்டு கொண்டே செல்லும். இதன் காரணமாகவே வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டுள்ளார்.
-
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
கோவை ஈஷா யோகா மையத்தில் எஸ்.பி.வேலுமணியுடன் பேசியது என்ன? உடைத்து பேசிய பிரேமலதா












Click it and Unblock the Notifications