துணை கேப்டனுக்கே பெஞ்ச்.. வாஷிங்டன் சுந்தரை களமிறக்க வேண்டிய காரணம் என்ன? பின்னணி
அகமதாபாத்: நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் குல்தீப் யாதவ்க்கு ஓய்வு அளிக்கப்பட்டு அர்ஷ்தீப் சிங் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் துணைக் கேப்டன் அக்சர் படேல் பெஞ்ச் செய்யப்பட்டு வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடரில் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. ஏற்கனவே இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிவிட்ட சூழலில், இது சம்பிரதாய ஆட்டமாக அமைந்துள்ளது. இருந்தாலும் இதே அகமதாபாத் மைதானத்தில் தான் இந்திய அணி சூப்பர் 8 சுற்றில் தென்னாப்பிரிக்கா அணியை எதிர்கொள்ள உள்ளது.

இதனால் அகமதாபாத் மைதானத்தை நன்றாக புரிந்து கொள்ள இந்த ஆட்டம் சிறந்த வாய்ப்பாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இந்த பிட்சில் பனிப்பொழிவு அதிகமிருக்கும் என்பதால், பவுலர்களுக்கு கொஞ்சம் சவால் அளிக்கலாம் என்று முடிவு எடுத்ததாக கூறி இருக்கிறார்.
அதேபோல் இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. குல்தீப் யாதவ் பெஞ்ச் செய்யப்பட்டு அர்ஷ்தீப் சிங்கும், துணைக் கேப்டன் அக்சர் படேலுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு வாஷிங்டன் சுந்தரும் சேர்க்கப்பட்டுள்ளனர். இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் அக்சர் படேலின் சொந்த மைதானம் இது.
இருப்பினும் காயத்தில் இருந்து வந்துள்ள வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு வழங்க வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இதற்கு கம்பீரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையே காரணமாக அமைந்துள்ளது. ஏனென்றால் வருண் சக்கரவர்த்தி மற்றும் அக்சர் படேல் ஸ்பின்னர்களாக இருக்கின்றனர். 3வது ஸ்பின்னர் தேவைப்பட்டால், குல்தீப் யாதவை சேர்க்க வேண்டிய சூழல் உள்ளது.
ஒருவேளை பாகிஸ்தான் அணியுடன் அரையிறுதி அல்லது இறுதிப் போட்டியில் மோத வேண்டிய சூழல் ஏற்பட்டால், 3 ஸ்பின்னர்கள் கண்டிப்பாக தேவை. இதனால் ஒரு பேட்ஸ்மேனை இழக்க வேண்டிய சூழல் ஏற்படும். அதற்கு பதிலாக வாஷிங்டன் சுந்தரை பிளேயிங் லெவனில் சேர்த்தால் நம்பர் 9 வரை பேட்டிங் வரிசை நீண்டு கொண்டே செல்லும். இதன் காரணமாகவே வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டுள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications