Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஐசிசியை கண்ட்ரோல் பண்றாங்க.. இந்தியாவின் வெற்றி "சீட்டிங்".. கதறும் ஆஸ்திரேலியர்கள்.. என்ன காரணம்?

Subscribe to Oneindia Tamil

துபாய்: சாம்பியன்ஸ் கோப்பை 2025 தொடரில் இந்திய அணி தொடர்ந்து 4 போட்டிகளை துபாயில் ஆடியதை ஆஸ்திரேலியர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். சாம்பியன்ஸ் டிராஃபி அரையிறுதியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இந்தியா. அதிகபட்சமாக விராட் - 84, ஸ்ரேயஸ் ஐயர் - 45 ரன்கள் குவித்தனர்.

நேற்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா தொடக்கத்திலேயே திணற தொடங்கியது. ஆஸ்திரேலியா என்று வந்துவிட்டாலே இந்தியா பவுலிங் சொதப்புவதுதான் சமீபத்திய டிரெண்ட். முக்கியமாக ஹெட் இந்திய அணியின் பவுலிங்கை துவம்சம் செய்வதே வழக்கம்.

Champions Trophy 2025

ஆனால் நேற்று ஹெட் வெறும் 39 ரன்களில் அவுட் ஆனார். அதன்பின் ஆஸ்திரேலியா அணியின் ரன் ரேட் தொடர்ந்து அதிகரித்தாலும். அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தன. ஸ்மித் அதிரடியாக 73 ரன்கள் எடுத்தார்.

ஆனால் ரன் கூடினாலும் விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்தன. அலெக்ஸ் கேரி 61 ரன்கள் எடுத்து அவுட்டாகும் வரை ஆஸ்திரேலிய அணி நல்ல சூழலில்தான் இருந்தது. ஆனால் சிக்கலே.. அதன்பின் வரிசையாக ஆஸ்திரேலிய அணி விக்கெட்டுகளை இழந்தது. இதனால் 49.3 ஓவரிலேயே 264-10 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலிய அணி அவுட் ஆனது.

இதையடுத்து இந்திய அணியில் ரோஹித் சர்மா 28 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். கில் வெறும் 8 ரன்கள் எடுத்தார். அதன்பின் கோலி, ராகுல், பாண்டியா அதிரடியால் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இந்தியா. அதிகபட்சமாக விராட் - 84, ஸ்ரேயஸ் ஐயர் - 45 ரன்கள் குவித்தனர். ராகுல் வெறும் 34 பந்தில் 42 ரன்கள் எடுத்தார். பாண்டியா வெறும் 24 பந்தில் 28 ரன்கள் எடுத்தார்.

விமர்சனம்

சாம்பியன்ஸ் கோப்பை 2025 தொடரில் இந்திய அணி தொடர்ந்து 4 போட்டிகளை துபாயில் ஆடியதை ஆஸ்திரேலியர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்தியாவின் வெற்றி சீட்டிங்.. ஐசிசியை பிசிசிஐ கண்ட்ரோல் செய்வதாக புகார்கள் வைக்கப்பட்டு உள்ளது. ஆஸ்திரேலியர்கள் இப்படி கதற காரணம் உள்ளது.

1. இந்திய அணி சாம்பியன்ஸ் கோப்பையின் எல்லா போட்டிகளையும் ஒரே இடத்தில் துபாயில் ஆடுகிறது. மற்ற அணிகள் துபாய் - பாகிஸ்தான் இடையே அடிக்கடி பயணம் செய்ய வேண்டி உள்ளது.

2. அதிலும் சில அணிகளுக்கு அடுத்த போட்டியை நாம் எங்கே ஆட போகிறோம்.. துபாயில் ஆட போகிறோமா.. பாகிஸ்தானில் ஆட போகிறோமா என்பதே தெரியாத நிலை உள்ளது.

3. இந்தியாவிற்கு பயணம் இல்லாததால் பயிற்சி எடுக்க நேரம் இருக்கிறது. ஆனால் மற்ற அணிகளுக்கு நேரம், ஓய்வு தேவைப்படுகிறது. ஆனால் அது கிடைப்பது இல்லை.

4. இந்திய அணி துபாய் பிட்ச் என்பதால் ஸ்பின் பவுலர்களை எடுத்துள்ளது. ஆனால் மற்ற அணிகள் பாகிஸ்தானை மனதில் வைத்து பாஸ்ட் பவுலர்களை எடுத்தது. அவர்களால் துபாயில் இந்திய அணியை சமாளிக்க முடியவில்லை.

5. இதெல்லாம் இந்திய அணிக்கு கூடுதலாக சாதகமாக மாறி உள்ளது. மற்ற அணிகளுக்கு எதிராக மாறி உள்ளது. இதைத்தான் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+