“ஒன்பதுல” அப்படி என்னதான் இருக்கு? இலங்கை மக்கள் புரட்சியும் 9 ஆம் தேதிகளும்.. ஒரு சுவாரஸ்ய தகவல்
கொழும்பு: இலங்கையில் கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக மக்கள் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், ஒவ்வொரு மாதமும் 9 ஆம் தேதிகளில் போராட்டம் உக்கிரமடைந்து ஏதாவது ஒரு மிகப்பெரிய சம்பவம் அரங்கேறி வருகிறது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கணிக்கமுடியாத பெரும் பொருளாதார நெருக்கடி காரணமாக 2 கோடியே 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கடும் இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் தொடர் மின்வெட்டு, பெட்ரோல், டீசல் தட்டுப்பாடுகள், மருந்து தட்டுப்பாட்டால் அந்நாட்டில் மக்கள் வாழ்வதே கேள்விக்குறியானது.

ஏப்ரல் 9 ஆம் தேதி
இதனால் அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசு கடும் நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. அரசு பொருளாதாரத்தை முறையாக கையாளவில்லை என்றும், தவறான பொருளாதார கொள்கைகளால் இந்த நெருக்கடி ஏற்பட்டுவிட்டதாகக்கூறி அந்நாட்டு மக்கள் அரசுக்கு எதிராக கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி பொதுமக்கள் இலங்கையின் முக்கிய நகரங்களில் போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர்.

மே 9 ஆம் தேதி
நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றதை அடுத்து அந்நாட்டு பிரதமர் மகிந்த ராஜபக்ஷே கடந்த மே 9 ஆம் தேதி பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து தலைமறைவானார். பொதுமக்கள் ராஜபக்ஷேவின் வீடுகள், அவரது பெற்றோரின் கல்லரைகள், சொத்துக்களை தீக்கிரையாக்கினர். இதனை தொடர்ந்து இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பிரதமராக பதவியேற்றார்.

ஜூன் 9 ஆம் தேதி
ரணில் விக்கிரமசிங்கே பிரதமராக பதவியேற்றும் இலங்கையின் நிலை மோசமடைந்துகொண்டே சென்றது. இதனால் அடுத்த பிரதமராகவிடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தார் பசில் ராஜபக்ஷே. ஜூன் மாதம் மக்கள் புரட்சி வேகமெடுத்து பசில் ராஜபக்ஷே குறிவைக்கப்பட்டார். அழுத்தம் தாங்க முடியாமல் ஜூன் 9 ஆம் தேதி அமைச்சர் பதவியிலிருந்தே பசில் ராஜினாமா செய்தார்.

ஜூலை 9 ஆம் தேதி
இந்த நிலையில் ஜூலை 9 ஆம் தேதியான இன்று அதிபர் கோட்டாபய ராஜபக்ஷேவுக்கு எதிரான போராட்டங்களும் வீரியமடைந்து அதிபர் மாளிகை மற்றும் அதிபரின் செயலகத்திற்கு பொதுமக்கள் புகுந்தனர். அனைத்து கட்சித் தலைவர்களின் பரிந்துரையை ஏற்று பதவியிலிருந்து விலகுவதாக ரணில் விக்கிரமசிங்கே அறிவித்தார். அவரது வீடும் போராட்டக்காரர்களால் தீக்கிரையாக்கப்பட்டது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications