கொழும்பு: டக்ளஸ் தேவானந்தா உட்பட மேலும் 8 புதிய அமைச்சர்கள் இன்று ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே முன்னிலையில் பதவியேற்றனர்.
ஆகஸ்ட் மாதத்தில் உணவு பஞ்சம் உச்சம் தொட வாய்ப்பு உள்ளது. அடுத்த வருடம் மார்ச் மாதம் வரை உணவு பஞ்சத்தை சமாளிக்க வேண்டும் என்று ரணில் எச்சரிக்கை விடுத்துள்ளார். இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடிநிலவி வருகிறது. இதையடுத்து அங்கு அரசுக்கு எதிராக கடுமையான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 1948க்கு பின் இலங்கையில் நிலவும் மிக கடுமையான பொருளாதார நெருக்கடி இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் உணவிற்கே கஷ்டப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
May 23, 2022, 11:47 am IST
இலங்கையில் டக்ளஸ் தேவானந்தா உட்பட மேலும் 8 புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர்
May 23, 2022, 9:19 am IST
இலங்கையை போல இதர நாடுகளிலும் புரட்சிக்கு வாய்ப்பிருக்கிறது: உலக வங்கி எச்சரிக்கை
May 23, 2022, 8:12 am IST
நிவாரணப் பொருட்கள் வழங்கிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி- மனோ கணேசன் எம்.பி.
இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் இலங்கை எம்.பி.யாவதை தடை செய்யும் அரசியல் சாசன திருத்தம் இன்று அமைச்சரவையில் தாக்கல்
May 23, 2022, 7:18 am IST
இலங்கையில் அடுத்த மாதம் மிகப் பெரும் வன்முறை ஏற்படும் அபாயம் உள்ளது- எம்.பி பாட்டலி சம்பிக்க ரணவக்க
May 23, 2022, 7:02 am IST
இலங்கை வெளிவிவகார செயலாளராக அருணி விஜேவர்தன நியமனம்
May 23, 2022, 7:02 am IST
இலங்கையில் 2 வாரங்களில் 92 குரங்கு அம்மை நோய்கள் கண்டறியப்பட்டுள்ளன
May 23, 2022, 7:02 am IST
இலங்கை: மே9 வன்முறை சம்பவங்கள் தொடர்பாக 1,500 பேர் கைது
May 22, 2022, 7:10 pm IST
தமிழ்நாடு அரசுக்கு இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நன்றி
May 22, 2022, 7:10 pm IST
தமிழக அரசின் மனிதாபிமான உதவிக்காக நன்றி தெரிவித்த இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே
May 22, 2022, 7:10 pm IST
தமிழக அரசு அனுப்பிய அரிசி, பால் பவுடர், மருந்துகள் இன்று கொழும்பு சென்ற நிலையில் ரணில் நன்றி
May 22, 2022, 3:11 pm IST
பொதுமக்களின் தாக்குதல்களுக்கு பயந்து கடந்த செவ்வாய்க்கிழமை எம்.பிக்கள் தம்மை உருமாற்றியே நாடாளுமன்றத்துக்கு வருகை தந்ததாக சிங்கள வார ஏடு தகவல்
May 22, 2022, 10:54 am IST
குரங்கு அம்மை பரவல் தொடர்பாக இலங்கையிலும் தீவிர பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
May 22, 2022, 10:25 am IST
இலங்கை மாவத்தகம பரகஹதெனிய பிரதேசத்தில் நேற்று இரவு மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு
May 22, 2022, 8:50 am IST
15 இலங்கை நாட்டவருடன் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய முயன்ற படகு தடுத்து நிறுத்தம்
May 22, 2022, 8:38 am IST
தமிழக அரசின் நிவாரணப்பொருட்களை ஏற்றிய கப்பல் இன்று கொழும்பு வந்தடையும்
May 22, 2022, 8:38 am IST
இலங்கை: ராணுவ புரட்சிக்கு சிங்கள ராணுவம் தயார்- ராணுவ தளபதி சவேந்திர சில்வா
May 22, 2022, 8:01 am IST
இலங்கையில் எரிபொருள் நெருக்கடியை விரைவில் தீர்க்க முடியும் - பிரதமர் ரணில் விக்ரமசிங்க
May 22, 2022, 7:06 am IST
சென்னையில் விடுதலைப் புலிகள் ஆதரவு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கூட்டம்- அனுமதி இல்லாமல் நடத்தியதால் போலீஸ் கைது
May 22, 2022, 6:39 am IST
இலங்கையில் அவசர கால சட்டம் நீக்கம்- ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே
May 22, 2022, 6:39 am IST
மே 9 வன்முறை தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரி விக்ரமரத்னவிடம் 5 மணிநேரம் விசாரணை
May 22, 2022, 6:39 am IST
இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலைதான்- யாழ்ப்பாணம் வலி.மேற்கு பிரதேச சபை தீர்மானம்
May 22, 2022, 6:39 am IST
இந்தியா கடனுதவியால் பெறப்பட்ட 40,000 மெட்ரிக் டன் டீசலுடன் கப்பல் கொழும்பு வந்தடைந்தது
May 21, 2022, 12:08 pm IST
இலங்கை பொருளாதார நெருக்கடியால் இலங்கை தமிழர்களுக்கு கடும் பாதிப்பு.
ஆபத்தான முறையில் படகுகள் மூலம் தமிழகம் வரும் நிகழ்வுகள் அதிகரிப்பு.
சில நாட்களில் மட்டும் 80க்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் ராமேஸ்வரம் திரும்பியுள்ளனர்
May 21, 2022, 12:06 pm IST
இலங்கை: அரசு ஊழியர்கள் அலுவலகம் வர வேண்டாம் என்று உத்தரவு.
பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு காரணமாக யாரும் அலுவலகம் வர வேண்டாம் என்று உத்தரவு
May 21, 2022, 11:13 am IST
இலங்கையில் கடுமையான உணவு பஞ்சம் ஏற்பட வாய்ப்பு - பிரதமர் ரணில் எச்சரிக்கை.
ஆகஸ்ட் மாதத்தில் உணவு பஞ்சம் உச்சம் தொட வாய்ப்பு - ரணில்.
அடுத்த வருடம் மார்ச் மாதம் வரை உணவு பஞ்சத்தை சமாளிக்க வேண்டும் - ரணில் எச்சரிக்கை
May 20, 2022, 6:01 pm IST
வன்முறை சம்பவங்கள் நடைபெறுவதால் குடிமக்கள் இலங்கை செல்ல கூடாது: தென்கொரியா திடீர் தடை
May 20, 2022, 5:12 pm IST
இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் இன்று சந்தித்து ஆலோசனை
May 20, 2022, 5:12 pm IST
மே 9 வன்முறை- மகிந்த ராஜபக்சே மகன் நாமல் ராஜபக்சேவிடம் போலீஸ் விசாரணை
May 20, 2022, 12:09 pm IST
ராஜபக்சே ஆதரவு எம்.பி. அத்துகோரள படுகொலை சம்பவத்தில் முக்கிய குற்றவாளி கைது
READ MORE
9:55 AM, 10 May
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் பிரதமர் பதவியிலிருந்து விலகினார் ராஜபக்ச
9:55 AM, 10 May
இலங்கையில் வன்முறை வெடித்து தீவிரமடைந்துள்ளது
9:55 AM, 10 May
பிரதமருக்கான சொகுசு மாளிகையான அலரி மாளிகையை விட்டு வெளியேறினார் ராஜபக்ச
9:55 AM, 10 May
அலரி மாளிகையிலிருந்து வெளியேறினார் மகிந்த ராஜபக்ச
10:41 AM, 10 May
மஹிந்த ராஜபக்சே வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் நாடாளுமன்றத்தை கூட்ட உத்தரவு
10:42 AM, 10 May
இலங்கையில் மக்களிடையே கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது
10:42 AM, 10 May
இலங்கை நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு சபாநாயகருக்கு அதிபர் உத்தரவு
12:05 PM, 10 May
ராஜபக்ஷ குடும்பம் ஹெலிகாப்டரில் தப்பி ஓட்டம்.
கொழும்பு-05 திம்பிரிகஸ்யாக போலீஸ் மைதானத்தில் இருந்து திருகோணமலைக்கு தப்பி ஓட்டம்.
திருகோணமலைக்கு ஹெலிஹாப்டரில் தப்பியோடிய காட்சி வெளியாகியுள்ளது
12:09 PM, 10 May
இலங்கை- துப்பாக்கிச் சூட்டில் பலி 5 ஆக உயர்வு
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சேவின் ஜோதிடர் ஞான அக்கா வீடு நேற்று இரவு தீக்கிரை.
பொதுமக்கள் நடத்திய தாக்குதலில் இமதுவ பிரதேச சபை தலைவர் சரத்குமார் மரணம்.
இலங்கையில் நேற்று நடத்தப்பட்ட 2 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் பலியானோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரிப்பு.
கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையம், ரத்மலானை விமான நிலையத்தை சுற்றி வளைத்துள்ளனர் போராட்டகாரர்கள்
12:34 PM, 10 May
இலங்கையில் ராணுவ ஆட்சி பிரகடனம்?- வன்முறைகள் தொடர்ந்து வெடிக்கலாம்: சந்திரிகா குமாரதுங்க எச்சரிக்கை
I appeal to all our citizens who have carried on a Wonderful struggle for Justice and Democratic governance so PEACEFULLY,to be aware that saboteurs may be used to incite violence in order to pave the way for military rule.Please use your organisational skills to halt this danger
— Chandrika Bandaranaike Kumaratunga (@CBKsrilanka) May 10, 2022
1:03 PM, 10 May
திருகோணமலையில் ராஜபக்சே குடும்பம்- பொதுமக்கள் போராட்டம்
ராஜபக்சே குடும்பத்தினர் தஞ்சமடைந்த திருகோணமலை கடற்படை தளம் முன்பாக பொதுமக்கள் போராட்டம்.
கொழும்பில் இருந்து ராஜபக்சே குடும்பத்தினர் ஹெலிகாப்டர் மூலம் திருகோணமலைக்கு தப்பி ஓட்டம்.
திருகோணமலையில் உள்ள இலங்கை கடற்படை முகாமில் ராஜபக்சே குடும்பம் தஞ்சம்
People are protesting in front of the Trincomalee Eastern Command Naval Base, where Mahinda Rajapaksa and his family members have reportedly been given safe haven.
இலங்கைக்கு இந்தியா ராணுவத்தை அனுப்பி அரசியலமைப்பு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் - சு. சாமி.
இலங்கையில் போராட்டம் மற்றும் கலவரம் நடக்கும் நிலையில் சுப்பிரமணியன் சாமி வேண்டுகோள்.
இந்தியாவிற்கு எதிரான அந்நிய சக்திகள் இலங்கை விவகாரத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருகிறது - சு. சாமி.
இது இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் - சு. சாமி
India must send in the Indian Army to restore Constitutional sanity. At present anti Indian foreign forces are taking advantage of people’s anger. This affects India’s national security
SriLanka நிலைமை இது தான் | தமிழர்கள் சாபம் சும்மா விடுமா? | Oneindia Tamil
5:12 PM, 10 May
எனது வீட்டை எரித்துவிட்டதால் இனி அரசியலுக்கே வரமாட்டோம் என்று ராஜபக்சே ஆதரவு எம்.பி குணபால ரத்னசேகர அறிவித்துள்ளார்.
5:12 PM, 10 May
"வரலாறு திருப்பி அடித்தது.. அந்த வயிற்றெரிச்சல்தான்.." பிரேமலதா அதிரடி - வீடியோ
5:28 PM, 10 May
மகிந்த ராஜபக்சே குடும்பத்துடன் இலங்கையில் இருந்து தப்பி ஓடிவிட்டார்?
இலங்கை: திருகோணமலை கடற்படை முகாமில் இருந்து மகிந்த ராஜபக்சே, குடும்பத்துடன் தப்பி ஓட்டமா?.
திருகோணமலையில் இருந்து மகிந்த ராஜபக்சே, குடும்பத்துடன் தப்பி ஓடியதாக சிங்கள ஊடகம் தகவல்.
இலங்கை கடற்படைக்கு சொந்தமான கப்பலில் மகிந்த ராஜபக்சே, குடும்பத்துடன் தப்பி ஓடிவிட்டனர்- சிங்கள ஊடகம்
5:35 PM, 10 May
இலங்கை- பொதுமக்களுக்கு ஜனாதிபதி கோத்தபாய அப்பீல்
வன்முறைகள், பழிவாங்கும் செயல்களை கைவிட இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே வேண்டுகோள்.
நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண அனைத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்- கோத்தபாய ராஜபக்சே.
இலங்கை பற்றி எரியும் நிலையில் கோத்தபாய ராஜபக்சே ட்விட்டர் மூலம் வேண்டுகோள்
I appeal and urge people to remain calm & stop violence & acts of revenge against citizens, irrespective of political affiliations.
All efforts will be made to restore political stability through consensus, within constitutional mandate & to resolve economic crisis.
இலங்கை வன்முறை: 8 பேர் பலி- 220 பேர் படுகாயம்; 38 வீடுகள் தீக்கிரை- 47 வாகனங்கள் எரிந்து சாம்பல்!
7:16 PM, 10 May
இலங்கையில் பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவிப்போர் மீது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவு
8:49 PM, 10 May
இலங்கை காலி ரத்கம பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் மூவர் காயமடைந்துள்ளனர்.
9:20 PM, 10 May
இலங்கை நாட்டில் மே 12ஆம் தேதி காலை 7 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிப்பு
9:20 PM, 10 May
வன்முறையை கட்டுப்படுத்த நாளை வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், ஊரடங்கு நீடிப்பு
9:20 PM, 10 May
இலங்கையில் வன்முறை தொடரும் நிலையில், வரும் மே 12 வரை ஊரடங்கு நீடிப்பு
10:28 PM, 10 May
இலங்கை அங்கொடையில் போலீஸ் வாகனத்துக்கு தீ வைக்க முயற்சி- வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு
10:32 PM, 10 May
இலங்கை- தொடரும் தீ வைப்பு சம்பவங்கள்- துப்பாக்கிச் சூடு
ஏறாவூர் எம்.பி. நசீர் அகமது அலுவலகம் தீக்கிரை; ராஜபக்சே கட்சி மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் சந்திரகுமார் அலுவலக பெயர் பலகைகள் தீ வைப்பு
ரத்கம பிரதேச சபை தலைவர் வீடு அருகே துப்பாக்கிச் சூடு; 4 பேர் படுகாயம்
10:34 PM, 10 May
இலங்கை: மகிந்த ராஜபக்சே மகன் யோஷிதவுக்கு சொந்தமான சொகுசு விடுதிகள் தீக்கிரை
Sri Lanka Crisis and Protest (இலங்கை பொருளாதார நெருக்கடி & வன்முறை போரட்டம் ) LIVE News Updates in Tamil: இலங்கையில் பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து கடுமையான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இது குறித்த நேரலை செய்திகளை இந்த பக்கத்தில் தெரிந்து கொள்ளுங்கள்.