இலங்கை: ராஜபக்சே காலத்தில் தூதர்களாக நியமிக்கப்பட்ட முன்னாள் ராணுவ அதிகாரிகளிடம் போலீஸ் விசாரணை
கொழும்பு: இலங்கையில் ராஜபக்சே காலத்தில் வெளிநாட்டு தூதர்களாக நியமிக்கப்பட்ட முன்னாள் ராணுவ அதிகாரிகளிடம் போலீஸ் துறையின் நிதி குற்ற புலனாய்வு படை விசாரணை மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் உள்நாட்டு போரின்போது, விடுதலைப்புலிகளையும், ஈழத்தமிழர்களையும் கொன்று குவித்த ராணுவ தளபதிகளுக்கு பலவித சலுகைகளை வழங்கினார் முன்னாள் அதிபர் ராஜபக்சே.

பாதுகாப்பு படைகளில் தளபதிகளாக பதவி வகித்த சாந்த கோட்டகொடா, வசந்த கரன்னாகோடா, திசர சமர சிங்கே, ஜெயலத் வீரக்கொடி, விஜேசிறி ஆகிய 5 பேரும் வெளிநாடுகளில் இலங்கை தூதர்களாக நியமிக்கப்பட்டு, கவுரவிக்கப்பட்டனர். வெளிநாட்டு தூதரக பணியில் ராணுவ தளபதிகளை ராஜபக்சே அரசு ஈடுபடுத்தியது அப்போது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இலங்கையில் புதிதாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, அதிபராக சிறிசேனா பதவி ஏற்றபிறகு, ராஜபக்சே ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற நிதி முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்த போலீஸ் துறையின் நிதி குற்ற புலனாய்வு படை அமைக்கப்பட்டது.
இந்த நிலையில், சாந்த கோட்டகொடா, வசந்த கரன்னாகோடா, திசர சமர சிங்கே, ஜெயலத் வீரக்கொடி, விஜேசிறி ஆகிய 5 பேரிடமும், போலீஸ் துறையின் நிதி குற்ற புலனாய்வு படையினர் நேற்று விசாரணை நடத்தினர். தூதரக பணியில் அவர்கள் செய்த பங்களிப்பு, அவர்கள் பங்கெடுத்த அரசியல் நடவடிக்கைகள் பற்றி கேள்விகள் கேட்கப்பட்டன. அவர்கள் அளித்த பதில்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நிதிமோசடி வழக்கில் ராஜபக்சே உள்ளிட்ட 5 பேர் இன்று விசாரணைக்கு ஆஜாராகுமாறு சம்மன் அனுப்பியுள்ள நிலையில், நேற்று முன்னாள் ராணுவ தளபதிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இன்று விசாரணைக்கு வரும் ராஜபக்சே கைதாக வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications