இலங்கை போர் விடுதலைப் புலிகளுக்கு எதிரானது தமிழர்களுக்கல்ல... சொல்கிறார் ராஜபக்சே
கொழும்பு: இலங்கையில் நடைபெற்ற போர் விடுதலைப் புலிகளுக்கு எதிரானதே தவிர தமிழ் மக்களுக்கு எதிரானது அல்ல என இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
இன்னும் இரண்டு வாரங்களில் ஜெனீவா மாநாட்டில் இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வரப்பட இருக்கிறது. அப்போது, இலங்கை போர்க்குற்றம் தவிர இலங்கையில் நடைபெற்று வருவதாக கூறப்படும் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை குறித்தும் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.
இந்நிலையில், இலங்கையின் கலே நகரில் நடந்த அரசியல் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார் அந்நாட்டு அதிபர் ராஜபக்சே. அப்போது அவர் இலங்கை போர் குறித்தும் சிறுபான்மையினர் மீதான அத்துமீறல் குற்றச்சாட்டு குறித்தும் பேசினார்.

மேலும், இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
விடுதலைப் புலிகளை எதிர்த்து...
விடுதலைப் புலிகள் என்ற ஒரு பயங்கரவாத அமைப்பை எதிர்த்தே இலங்கையில் போர் நடத்தப்பட்டது. போரின் இலக்கு தமிழார்கள் அல்ல.
எப்படி இது சாத்தியம்..?
தமிழ் மக்களுக்கு எதிராகவே போர் நடத்தப்பட்டது என்ற குற்றச்சாட்டு உண்மையானது என்றால் இலங்கையின் தெற்கே சிங்களவர் மத்தியில் தமிழர்கள் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்கிறார்களே அது எப்படி சாத்தியமாகும்.
மறுப்பு...
இலங்கையில், சிறுபான்மையினர் குறிப்பாக முஸ்லீம்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டில் உண்மையில்லை. சில வெளிநாட்டு சக்திகளின் உதவியுடன் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து இலங்கை மீது அவதூறு பரப்பி வருகின்றன.
இலங்கைக்கு களங்கம்...
ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், இது மாதிரியான பிரச்சாரங்களை பரப்பி சர்வதேச அரங்கில் இலங்கைக்கு கலங்கம் விளைவிக்கும் முயற்சி நடைபெறுகிறது' என இவ்வாறு அவர் பேசினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications