ஈழத்தின் எல்லை சுருங்கிவிட்டதாம்.. உள்ளாட்சி வெற்றி மமதையில் ராஜபக்சே எகத்தாளம்
தமிழீழத்தின் எல்லை சுருங்கிவிட்டது என கிண்டலடித்துள்ளார் ராஜபக்சே.
கொழும்பு: உள்ளாட்சி தேர்தலில் அமோக வெற்றி பெற்ற மமதையில் ஈழப் பிராந்தியத்தின் எல்லை மிகவும் சுருங்கிவிட்டது என கிண்டலடித்துள்ளார் மகிந்த ராஜபக்சே.
இலங்கை உள்ளாட்சித் தேர்தலில் ராஜபக்சேவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து இலங்கை அரசியலில் பரபரப்பு நிலவுகிறது.

ராஜபக்சே வியூகம்
இலங்கை அரசியலில் ராஜபக்சேவின் கை ஓங்குவதால் பிரதமர் ரணில், அதிபர் மைத்ரிபால சிறிசேன கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த வாய்ப்பை பயன்படுத்தி சிறிலங்கா சுதந்திர கட்சியைக் கைப்பற்றுவதற்கும் மகிந்த வியூகம் வகுத்து வருகிறார்.

தேர்தல் நடத்த கோரிக்கை
இந்நிலையில் கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய ராஜபக்சே, நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு புதியதாக தேர்தல் நடத்த வேண்டும்; இலங்கையின் வரலாற்றில் ஆளும் கட்சிகளை எதிர்க்கட்சியானது உள்ளாட்சி தேர்தலில் தோற்கடித்த முதல் வரலாறு நிகழ்ந்திருக்கிறது என கூறினார்.

ராஜபக்சே கிண்டல்
அப்போது, இலங்கை தேர்தல் முடிவுகளை வெளியிட்ட பத்திரிகை ஒன்றை காண்பித்து, இலங்கையின் அனைத்து பகுதிகளிலும் எமது கட்சியின் அரக்கு நிறம்தான் இருக்கிறது. ஈழ பிராந்தியம் என்பது கூட சுருங்கிப் போய்விட்டது என கிண்டலடித்திருக்கிறார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் வெற்றி
சிங்களர் பகுதியில் ராஜபக்சே வென்றதைப் போல தமிழர் பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வென்றுள்ளது. இலங்கை அளவில் 3-வது பெரிய கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது,.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications