இன்று முதலை கண்ணீர்வடிக்கும் நாடுகள் அன்று பிரபாகரனை அழிக்க துணைநின்றன:பஷில் ராஜபக்சே
Subscribe to Oneindia Tamil

இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று பஷில் ராஜபக்சே பேசியதாவது:
தமிழ் மக்களுக்காக இன்று முதலைக்கண்ணீர் வடிக்கின்ற வெளிநாடுகள் நினைத்திருந்தால் அன்று யுத்தத்தை நிறுத்தியிருக்க முடியும். ஆனால் எங்கள் அரசாங்கத்தைப் பயன்படுத்தி பிரபாகரனை அழிக்கும் தேவை அவர்களுக்கு அன்று இருந்தது. இலங்கையில் இருப்பது உள்நாட்டின் பிரச்சினை. இதில் அன்னிய தலையீடுகளை அனுமதிக்க மாட்டோம். எமது பிரச்சினையை நாங்களே தீர்த்துக் கொள்வோம்.
இந்த பிரச்சனைக்குத் தீர்வு காண தமிழ் மக்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அழைப்பு விடுக்கிறோம்.
அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் வடக்கில் அபிவிருத்திகளை மட்டுமின்றி ஜனநாயக முறைமைகளையும் உறுதிப்படுத்தியிருக்கின்றது. வெளிநாடுகளில் இருந்த திணிக்கப்படுகின்ற எந்தவொரு தீர்வும் நமக்கு பயனுடையதாக இருக்காது என்றார்.












Click it and Unblock the Notifications