டெல்டா கொரோனா.. வேக்சின் மட்டும் ஊரடங்கை முடிவுக்கு கொண்டு வராது.. ஆஸ்திரேலியா பிரதமர் பரபரப்பு
சிட்னி: டெல்டா கொரோனா பாதிப்பால் ஆஸ்திரேலியாவில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், வேக்சின் பணிகள் மட்டும் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாத என்று அந்நாட்டின் பிரதமர் ஸ்காட் மாரிசன் கூறியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா 2ஆம் அலை ஏற்படுத்திய பாதிப்புகளை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்துவிட முடியாது. இதற்கு டெல்டா கொரோனா வைரசே முக்கிய காரணமாகக் கூறப்பட்டது.
இப்போது இந்தியாவில் டெல்டா கொரோனா பாதிப்பின் தாக்கம் குறைந்து வருகிறது. இருப்பினும் உலகின் மற்ற நாடுகளில் டெல்டா கொரோனாவின் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

டெல்டா கொரோனா
டெல்டா கொரோனாவால் இப்போது மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா உள்ளது. ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் மூலம் இத்தனை காலம் ஆஸ்திரேலியா கொரோனாவை கட்டுக்குள்ளேயே வைத்திருந்தது. ஆனால் வேக்சின் பணிகளைத் துரிதமாக மேற்கொள்ள அந்நாடு எவ்வித நடவடிக்கையையும் எடுக்காமலேயே இருந்தது.

ஆஸ்திரேலியா ஊரடங்கு
இதனால் டெல்டா கொரோனா பரவ தொடங்கியதும் அதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் பல்வேறு ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களிலும் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. உலகின் மற்ற முக்கிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் ஆஸ்திரேலியாவில் மிகக் குறைந்த நபர்களுக்கு மட்டுமே வேக்சின் போடப்பட்டுள்ளது. டெல்டா கொரோனா அதிகரிக்க இதுவே முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.

முடிவுக்குக் கொண்டு வராது
இந்நிலையில், நாட்டில் தற்போது நிலவும் கொரோனா பாதிப்பு குறித்து ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் கூறுகையில், "வேக்சின் பணிகள் மட்டும் கொரோனா ஊரடங்கை முடிவுக்குக் கொண்டு வராது. அதாவது, நாட்டில் தேவைக்கு ஏற்ப வேக்சின் கிடைப்பதில்லை. எனவே, வேக்சின் பணிகளின் வேகத்தை நாம் உயர்த்த வேண்டும். அது ஊரடங்கில் தளர்வுகளை அறிவிக்க உதவும் என்றாலும் வேக்சின் பணிகள் முடியும் வரை ஊரடங்கை வாபஸ் பெற முடியாது" என்று அவர் தெரிவித்தார்.

ஆஸ்திரேலிய பொருளாதாரம்
டெல்டா கொரோனாவால் வைரஸ் பாதிப்பு அதிகரித்ததால் அங்குள்ள பல முக்கிய நகரங்களில் மீண்டும் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், வேக்சின் பணிகள் மந்தமாகவே நடைபெறுவதால், கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த ஆஸ்திரேலிய அரசு மிகவும் சிரமப்பட்டு வருகிறது. மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் ஆஸ்திரேலியாவுக்குப் பல மில்லியன் டாலர் நஷ்டம் ஏற்படும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

டெல்டா வேக்சின்
டெல்டா கொரோனாவுக்கு எதிராக வேக்சின்களின் தடுப்பாற்றல் குறைவதாகக் கூறப்படுகிறது. இருந்தாலும்கூட, தீவிர டெல்டா கொரோனா பாதிப்பையும், உயிரிழப்புகளையும் வேக்சின்கள் தடுப்பதாகவே ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவில் அனைவரும் இரண்டு டோஸ் வேக்சின் போட்டுக்கொள்ள வேண்டும் என்பதையே ஆய்வாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications