10 ஆண்டுகளுக்கு முன் இறந்த தாய்... 2வது முறை இறப்புச் சான்றிதழ் பெற விண்ணப்பித்த மயான ஊழியர்கள் சஸ்பெண்ட்
ஈரோடு: பத்தாண்டுகளுக்கு முன்பு இறந்த அம்மாவுக்கு, மீண்டும் இறப்பு சான்றுபெற முயற்சித்த குற்றத்திற்காக மயான ஊழியர்கள் இருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஈரோடு மாநகராட்சிப்பகுதியில் உள்ள கருங்கல்பாளையம், காவிரிக்கரையில் மாநகராட்சி புதைப்பு மற்றும் எரிப்பு மயானம் உள்ளது. இங்கு, காவலராக மூர்த்தி என்பவர் உள்ளார். அதேபோல், இந்த மயானத்தின் முன்னாள் பணியாளரும், தற்போது மாநகராட்சி துப்புரவு தொழிலாளராக பணியாற்றி வருபவர் மணி.
சமீபத்தில் மணி தனது தாயின் இறப்புச் சான்றிதழ் வேண்டி விண்ணப்பித்துள்ளார். அதனுடன், மயானத்தில் வழங்கிய கடிதத்தை இணைத்து வழங்கியுள்ளார். சந்தேகமடைந்த அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்திய போது, விண்ணப்பதாரர் மணியின் அம்மா, கடந்த பத்தாண்டுக்கு முன், திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் இறந்ததும், ஏற்கனவே அதற்காக அங்கே இறப்பு சான்றிதழ் பெற்றதும் தெரியவந்தது.
மணி, மயான காவலர் மூர்த்தியுடன் இணைந்து, போலி ஆவணம் தயாரித்து, தன்னுடைய தாயாருக்கு இறப்பு சான்றிதழ் விண்ணப்பித்தது விசாரணையில் உறுதியானது. ஆனால், எதற்காக மணி தனது தாயின் இறப்புச் சான்றிதழ் வேண்டி இரண்டாவது முறை விண்ணப்பித்தார் என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப் பட்டு வருகிறது.
இதனை அடுத்து, மாநகராட்சி ஊழியர்களான, காவலர் மூர்த்தி, துப்புரவு பணியாளர் மணி ஆகிய இருவரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications