திருப்பூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து - 3 பேர் பலி - 7 பேர் படுகாயம்
Subscribe to Oneindia Tamil
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோயில் அருகே ஓலப்பாளையத்தில் கார் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பேர் பலியாகினர், 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
சாலை விபத்தில் பஞ்சு ஏற்றி வந்த லாரி தீப்பிடித்தது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

சாலை விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications