வருமான வரித்துறை அதிகாரிக்கு மிரட்டல் விவகாரம்... 3 தமிழக அமைச்சர்களும் நாளை முன்ஜாமீன் மனு தாக்கல்
வருமான வரித்துறை அதிகாரிக்கு மிரட்டல் விடுத்த விவகாரத்தில் எந்நேரத்திலும் தாம் கைது செய்யப்படலாம் என்ற சூழல் நிலவி வருவதால் தமிழக அமைச்சர்கள் 3 பேரும் முன்ஜாமீன் கேட்டு நாளை மனு தாக்கல் செய்யவுள்ளனர்.
சென்னை: அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாக தமிழக அமைச்சர்கள் 3 பேரும் கைது செய்யப்படலாம் என்பதால் அவர்கள் முன்ஜாமீன் கேட்டு நாளை மனுதாக்கல் செய்யவுள்ளனர்.
ஆர்கே நகர் இடைத்தேர்தலின்போது பணப்பட்டுவாடா செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார் உள்ளிட்டோரின் வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது விஜயபாஸ்கரின் வீட்டில் சோதனை நடைபெற்றபோது அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனும், சரத்குமாரின் வீட்டில் சோதனையின்போது கடம்பூர் ராஜுவும் பிரச்சினை செய்தனர்.

ஆவணத்தை அழிக்க முயற்சி
இந்நிலையில் விஜயபாஸ்கரின் வீட்டில் சோதனையின்போது அங்கு வந்த முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரத்திடம் முக்கிய ஆவணத்தை விஜயபாஸ்கர் கொடுத்ததாகவும், அதை ஆடைக்குள் மறைத்து கொண்டு சென்றபோது அதிகாரிகள் பார்த்து பறிமுதல் செய்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.

அதிகாரிக்கு மிரட்டல்
பாதுகாப்பை மீறி உள்ளே சென்று அதிகாரிகளை சோதனை செய்ய விடாமலும், பெண் அதிகாரியை மிரட்டியதோடு ஆபாசமாக பேசியதாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் சென்னை காவல்துறை ஆணையர் கரண் சின்ஹாவிடம் புகார் செய்தனர்.

வழக்குப் பதிவு
இதையடுத்து போலீஸ் ஆணையரின் உத்தரவின்பேரில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், காமராஜ், தமிழக டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் உள்ளிட்டோர் மீது அபிராமபுரம் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எந்த நேரத்திலும் கைது
இதனால் அவர்கள் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற சூழல் எழுந்துள்ளது. இதனால் முன்ஜாமீன் கேட்டு 3 அமைச்சர்களும் நாளை மனு தாக்கல் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications