பொம்மையில் மறைத்துக் கடத்தப்பட்ட 3 கிலோ தங்கம் பறிமுதல்: ஆந்திர சிறுவன் கைது
சென்னை: குவைத்தில் இருந்து விளையாட்டு பொம்மைகள் மற்றும் சாக்கலேட்டுகளில் மறைத்து 3 கிலோ தங்கத்தை கடத்தி வந்த ஆந்திர சிறுவனை சென்னை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
நேற்று காலை சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு குவைத்தில் இருந்து வந்த விமானத்தின் பயணிகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சுற்றுலா விசாவில் குவைத் சென்று திரும்பிய ஆந்திர மாநிலம் கடப்பா ராஜம்பேட் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் உண்டானது.
அதனைத் தொடர்ந்து அவனது உடைமைகளை சோதனை செய்தபோது அவற்றில் எதுவும் சிக்கவில்லை. ஆனால் அவனது சூட்கேசில் நிறைய விளையாட்டு பொம்மைகள், குழந்தைகளுக்கான சாக்லெட்டுகள், பிஸ்கட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது.
அது தொடர்பாக அதிகாரிகள் கேட்டதற்கு, ஆந்திராவில் பொம்மைக் கடை வைக்கப் போவதாக சிறுவன் பதிலளித்துள்ளான். சிறுவனின் பதிலில் திருப்தியடையாத அதிகாரிகள் பொம்மைகளை எடுத்து சோதனையிட்டபோது, அவற்றில் தங்கம் மறைத்து வைக்கப் பட்டிருந்தது கண்டு பிடிக்கப் பட்டது.
சுமார் 3 கிலோ தங்கத்தை சிறுவன் கொண்டு வந்திருந்த பொம்மைகள் மற்றும் சாக்லெட்டுகளில் இருந்து அதிகாரிகள் பிரித்தெடுத்து பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.90 லட்சம் எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து கைது செய்யப்பட்ட ஆந்திர சிறுவன், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்டு தற்போது சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சேர்க்கப் பட்டுள்ளான்.
-
தங்கம் விலை யூடர்ன்.. இனி தொடர்ந்து உயரபோகுது.. என்ன காரணம் தெரியுமா? -
நான் வந்துட்டேன்.. மீண்டும் கெத்தாக திரும்பிய தங்கம்! டாலரால் தலைகீழான மார்க்கெட்! அடுத்து என்ன? -
ஏர்போர்ட் கட்டத்தானே நிலம் கொடுத்தோம்.. என்ன கொடுமை இது.. விஜய்க்கு எதிராக திரளும் பரந்தூர் மக்கள் -
கிலோவுக்கு 1000000 தள்ளுபடி! 15% இறக்குமதி வரி.. இந்தியாவில் மீண்டும் தலைதூக்கும் தங்கக் கடத்தல்? -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ஆட்டம் போடும் அமெரிக்க டாலர்.. கோடிக்கணக்கான ரூபாய் தங்கத்தை விற்ற ரிசர்வ் வங்கி! இது தான் காரணமா? -
இனி தங்கம் உங்க கையில விளையாடும்! தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு! 5 நாள் ட்ரெய்னிங் போதும்! -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications