6 நாட்களாக கரையில் மிதந்து துர்நாற்றம் வீசிய திமிங்கலம்... கோடியக்கரையில் புதைப்பு
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், கட்டுமாவடி அருகே கடலில் இறந்து துர்நாற்றம் வீசிய திமிங்கலம் 6 நாட்களுக்கு பின்னர் மீட்கப்பட்டு கோடியக்கரையில் புதைக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடி கடற்கரையில் இருந்து சிறிது தூரத்தில் கடல் பகுதியில் கடந்த 23 ஆம் தேதி காலை ராட்சத திமிங்கலம் ஒன்று இறந்த நிலையில் ஒதுங்கியது. அந்த திமிங்கலம் 35 அடி நீளமும் 16 அடி அகலமும் இருந்தது.

இந்நிலையில் இந்த திமிங்கலம் கரை ஒதுங்க போதுமான ஆழம் இல்லாததால் கரை ஒதுங்க ஒரு மாதம் வரை ஆகலாம் என்றும் கரை ஒதுங்கும் போது அதிகமான துர்நாற்றம் வீசுவதுடன் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், அதற்குள் மீன்வளத்துறையினர் அந்த திமிங்கலத்தை அப்புறப்படுத்த வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
மீன்வளத்துறை மற்றும் வனத்துறையினரும் திமிங்கலத்தை அகற்ற மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து பேசிவந்தனர். ஆனால் 6 நாட்கள் ஆகியும் இறந்து துர்நாற்றம் வீசிய திமிங்கலம் மீட்கப்படவில்லை. இதனால் மீனவர்கள் அச்சமடைந்து கடலில் மீன்பிடிக்கவும் முடியவில்லை என்று புகார் செய்தனர்.
இந்நிலையில் நேற்று மீன்வளத்துறையினர் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மற்றும் உள்ளுர் மீனவ பிரதிநிதிகள் உதவியுடன் நான்கு படகுகள் ஒன்றன்பின் ஒன்றாக கயிறு கட்டி இறந்த திமிங்கலத்தின் கழுத்து நெஞ்சு பகுதியில் கயிறால் கட்டி கட்டுமாவடி கடலில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரம் உள்ள மணமேல்குடி கோடியக்கரைக்கு இழுத்து வந்தனர். பின்னர் பொக்லைன் மூலம் பள்ளம் தோண்டி திமிங்கலத்தை அங்கு புதைத்தனர்.
இதன்பிறகே காட்டுமாவடி மீனவர்கள் நிம்மதியுடன் மீன்பிடிக்க ஆயத்தமாகியுள்ளனர். மணமேல்குடி கோடியக்கரை பகுதியில் திமிங்கலம் புதைக்கப்படும் தகவல் அறிந்த 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களது குழந்தைகளுடன் வந்திருந்து ஆச்சிரியத்துடன் திமிங்கலத்தை பார்த்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications