ஜெயலலிதா இன்னும் உயிரோடுதான் உள்ளார் என்கிறதா அதிமுக? பொதுக்குழு தீர்மானம் சொல்லும் பாடம்
ஜெயலலிதா இறந்துவிட்ட நிலையில், அவருக்கு நோபல் பரிசு வழங்க தீர்மானம் போட்டு அதிர்ச்சி கிளப்பியுள்ளது அதிமுக பொதுக்குழு.
சென்னை: இறந்தவர்கள் பெயரை நோபல் பரிசுக்கு சிபாரிசு செய்ய முடியாது என்ற விதிமுறை கூட தெரியாமல் அல்லது தெரிந்தேவோ ஜெயலலிதாவுக்கு நோபல் பரிசு தர கோரியுள்ளது அதிமுக பொதுக்குழு.
பல்வேறு நெருக்கடியான அரசியல் சூழல்களுக்கிடையே ஜூலை 1979ம் ஆண்டு, இந்தியாவின் 5வது பிரதமராக பதவியேற்றார் சவுத்ரி சரண் சிங். பின்னர் 1980-ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி வரை 7 மாதங்கள் மட்டுமே ஆட்சியில் இருந்த சரண் சிங் 'ஜமீன்தாரி ஒழிப்புமுறை சட்ட'த்தை கொண்டு வந்தார்.
அப்போது அவர்கள் ஆதிக்கம் இந்தியாவின் பல பகுதிகளிலும் கோலோச்சியிருந்தது. ஆனால் அதை மீறி விவசாயிகள் நலன்காத்தவர் சரண் சிங்.

விவசாய நண்பர்
சரண் சிங் ஆட்சியின்போதே விவசாயிகளின் விளைபொருள் விற்பனைக்காக 'வேளாண் விளைபொருள் சந்தை மசோதா'வையும் அறிமுகப்படுத்தினார். இவையெல்லாம்தான் அவரது ஆட்சியில் பெருமளவுக்கு பெயரை ஈட்டித்தந்தன.

விவசாயிகள் தினம்
எனவே, ஒவ்வொரு ஆண்டும், அவரது பிறந்த நாளான, டிசம்பர் 23ம் தேதி 'தேசிய விவசாயிகள் தினமாக' கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஜெயலலிதாவின் பிறந்த நாளை தேசிய விவசாயிகள் தினமாக கொண்டாட அதிமுக பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இது எப்படி சாத்தியப்படும் என்பதை அதிமுக நிர்வாகிகள் யோசித்தனரா?

முரணான கோரிக்கை
இதேபோலத்தான், ஜெயலலிதாவுக்கு நோபல் பரிசு கேட்கும் தீர்மானமும் ரொம்பவே முரணானது. 1974ம் ஆண்டில், மாற்றியமைக்கப்பட்ட நோபல் விதிகளின் படி, இறந்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுவது கிடையாது.

நோபல் கிடைக்காது
1974ம் ஆண்டுக்கு முன்பு கூட, இரண்டு பேருக்கு மட்டுமே, இறந்த பின்பு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட பின்பு, ஒருவர் மரணம் அடைந்தால் அவருக்கு நோபல் பரிசு வழங்கப்படுமாம்.

அதிமுக நினைப்பு என்ன?
1974ம் ஆண்டுக்கு முன்பு, நோபல் பரிசுக்காக பரிந்துரைக்கப்பட்ட பின்பு ஒருவர் இறந்தால் அவருக்கு நோபல் பரிசு வழங்கலாம் என விதி இருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே ஜெயலலிதா உயிரோடு இருப்பதாக நினைத்துக் கொண்டுதான் இந்த தீர்மானத்தை அதிமுக நிறைவேற்றியதா என்பதுதான் புரியாத புதிர்.
-
தனித்தொகுதிகள்.. கோட்டையை இழந்த அதிமுக... களம் வென்ற திமுக! 2016 vs 2021 vs 2026 என்ன நடக்கும்? -
ஒன்றரை மாதத்தில் என்ன ஆகும்? அரியணை ஆட்டம்.. 2016 Vs 2021.. தமிழக தேர்தல் களத்தின் 'பவர்' ரிப்போர்ட் -
திமுக VS அதிமுக.. தமிழகத்தில் எந்த கூட்டணி பலம்? 2021 -2026 ஒப்பீடு.. ‘வெயிட்' காட்டும் கட்சிகள் -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
கிராமங்கள் vs நகரங்கள்.. 2021 சட்டசபை தேர்தலில் திமுக, அதிமுகவின் செயல்பாடுகள் எப்படி? -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
அமமுகவுக்கு 12 சீட்? குக்கர் சின்னத்தில் போட்டி.. பியூஷ் கோயல் - டிடிவி தினகரன் சந்திப்பில் உறுதி?! -
30+ தொகுதியில் போட்டி? தமிழகத்தில் பாஜக எந்தெந்த தொகுதிகளில் களமிறங்குகிறது.. வெளியான முக்கிய தகவல் -
இரட்டை இலை சின்னத்தில் ஆம்ஸ்ட்ராங் மனைவி போட்டி? எடப்பாடி போடும் அதிரடி பிளான்! -
இன்னும் 4 நாள் ஆகும்.. அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு காலதாமதம்.. அமித்ஷா – எடப்பாடி மீட்டிங் முடிவு -
பாஜக பஞ்சாயத்து ஓவர்..டேக் ஆஃப் ஆகுமா அதிமுக கூட்டணி! ப்ளானை மாற்றிய ’டெல்லி’ தலை! திடீர் ட்விஸ்ட்!












Click it and Unblock the Notifications