ஜெயலலிதா இன்னும் உயிரோடுதான் உள்ளார் என்கிறதா அதிமுக? பொதுக்குழு தீர்மானம் சொல்லும் பாடம்
ஜெயலலிதா இறந்துவிட்ட நிலையில், அவருக்கு நோபல் பரிசு வழங்க தீர்மானம் போட்டு அதிர்ச்சி கிளப்பியுள்ளது அதிமுக பொதுக்குழு.
சென்னை: இறந்தவர்கள் பெயரை நோபல் பரிசுக்கு சிபாரிசு செய்ய முடியாது என்ற விதிமுறை கூட தெரியாமல் அல்லது தெரிந்தேவோ ஜெயலலிதாவுக்கு நோபல் பரிசு தர கோரியுள்ளது அதிமுக பொதுக்குழு.
பல்வேறு நெருக்கடியான அரசியல் சூழல்களுக்கிடையே ஜூலை 1979ம் ஆண்டு, இந்தியாவின் 5வது பிரதமராக பதவியேற்றார் சவுத்ரி சரண் சிங். பின்னர் 1980-ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி வரை 7 மாதங்கள் மட்டுமே ஆட்சியில் இருந்த சரண் சிங் 'ஜமீன்தாரி ஒழிப்புமுறை சட்ட'த்தை கொண்டு வந்தார்.
அப்போது அவர்கள் ஆதிக்கம் இந்தியாவின் பல பகுதிகளிலும் கோலோச்சியிருந்தது. ஆனால் அதை மீறி விவசாயிகள் நலன்காத்தவர் சரண் சிங்.

விவசாய நண்பர்
சரண் சிங் ஆட்சியின்போதே விவசாயிகளின் விளைபொருள் விற்பனைக்காக 'வேளாண் விளைபொருள் சந்தை மசோதா'வையும் அறிமுகப்படுத்தினார். இவையெல்லாம்தான் அவரது ஆட்சியில் பெருமளவுக்கு பெயரை ஈட்டித்தந்தன.

விவசாயிகள் தினம்
எனவே, ஒவ்வொரு ஆண்டும், அவரது பிறந்த நாளான, டிசம்பர் 23ம் தேதி 'தேசிய விவசாயிகள் தினமாக' கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஜெயலலிதாவின் பிறந்த நாளை தேசிய விவசாயிகள் தினமாக கொண்டாட அதிமுக பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இது எப்படி சாத்தியப்படும் என்பதை அதிமுக நிர்வாகிகள் யோசித்தனரா?

முரணான கோரிக்கை
இதேபோலத்தான், ஜெயலலிதாவுக்கு நோபல் பரிசு கேட்கும் தீர்மானமும் ரொம்பவே முரணானது. 1974ம் ஆண்டில், மாற்றியமைக்கப்பட்ட நோபல் விதிகளின் படி, இறந்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுவது கிடையாது.

நோபல் கிடைக்காது
1974ம் ஆண்டுக்கு முன்பு கூட, இரண்டு பேருக்கு மட்டுமே, இறந்த பின்பு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட பின்பு, ஒருவர் மரணம் அடைந்தால் அவருக்கு நோபல் பரிசு வழங்கப்படுமாம்.

அதிமுக நினைப்பு என்ன?
1974ம் ஆண்டுக்கு முன்பு, நோபல் பரிசுக்காக பரிந்துரைக்கப்பட்ட பின்பு ஒருவர் இறந்தால் அவருக்கு நோபல் பரிசு வழங்கலாம் என விதி இருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே ஜெயலலிதா உயிரோடு இருப்பதாக நினைத்துக் கொண்டுதான் இந்த தீர்மானத்தை அதிமுக நிறைவேற்றியதா என்பதுதான் புரியாத புதிர்.
-
எடப்பாடியிடம் சீறிய சிவி சண்முகம்.. மன்னிப்பு கடிதம் எழுதி தரவேண்டுமா? தந்தால் இமேஜ் என்னவாவது? -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா? -
வந்துட்டேன்னு சொல்லு.. மீண்டும் எடப்பாடி கையில் அதிமுக? சிவிஎஸ் கூட்டிலிருந்து பறந்த எம்எல்ஏ.கள்! யார்? -
கீழ்தளத்தில் ராஜினாமா.. மேல்தளத்தில் இணைப்பு.. தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டது உண்மை.. ஓ.எஸ்.மணியன்! -
எடப்பாடிக்கு டிமிக்கி கொடுக்கும் 11 பேர்.. எஸ்கேப்பாகும் வேலுமணி.. அதிர்ச்சிக்கு ரெடியாகிறதா அதிமுக? -
இன்பதுரை எடுத்த சுப்ரீம் ஆயுதம்? சபாநாயகர் போட்ட 5 நிமிட உத்தரவு! சுப்ரீம் கோர்ட்டில் சிக்கும் தவெக? -
“தவெக ஆச்சரியக்குறிகளே.. விஜய்யை தலைவராக வச்சுக்கிட்டு எதுக்கு இதெல்லாம்?” அதிமுக காட்டமான பதிலடி -
அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் இசக்கி சுப்பையா.. கைப்பட கடிதம் கேட்ட சபாநாயகர் -
“கூவத்தூர் மாடல் மறந்து போச்சா? தோல்வியை மறைக்க அரசு மீது பழிபோடுகிறார்” - எடப்பாடிக்கு தவெக பதிலடி -
தவெகவில் இணைந்த நடிகர் மீசை ராஜேந்திரன்.. விஜயகாந்த் நிழலாகவே பயணித்தவர்.. அதிமுகவில் இருந்து ஜூட்! -
செத்த பாம்பை அடித்த எடப்பாடி.. 3 எம்எல்ஏ எஸ்கேப்! கெஜட்டிலேயே வந்தாச்சு! இப்போ பேசி என்ன பிரயோஜனம்? -
திமுகவுடன் குதிரை பேரம் நடத்தியது யார்?.. எடப்பாடிக்கு செங்கோட்டையன் அடுக்கடுக்கான கேள்வி!












Click it and Unblock the Notifications