சென்னை தொழிலதிபருக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க 'லுப்தான்சா'வுக்கு உத்தரவு
சென்னை: பிசினஸ் வகுப்பு டிக்கெட்டை எக்கானமி வகுப்பு டிக்கெட்டாக மாற்றியதற்காக லுப்தான்சா விமான நிறுவனம் சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபருக்கு ரூ.20 லட்சம் நஷ்ட ஈடு வழங்க மாநில நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை லிங்கிசெட்டித் தெருவைச் சேர்ந்தவர் ஷிவ் பிரகாஷ் கோயன்கா(70). தொழில் அதிபரான அவர் மாநில நுகர்வோர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
2010ம் ஆண்டு சென்னையில் இருந்து லுப்தான்சா ஜெர்மன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பிராங்பர்ட் வழியாக ஸ்பெயினில் உள்ள மாட்ரீ்டுக்கு சென்று வர முன்கூட்டியே பிசினஸ் வகுப்பில் டிக்கெட் முன்பதிவு செய்து இருந்தேன். நான் பயணம் செய்ய விமானத்தில் ஏறிய பின்தான் 'பிசினஸ்' வகுப்புக்கு பதிலாக எனக்கு 'எக்கானமி' வகுப்பில் இருக்கை ஒதுக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.
வயோதிகத்தால், நான் நடப்பது சிரமம். சக்கர நாற்காலியை தான் பயன்படுத்தி வருகிறேன். எக்கானமி வகுப்பில் பயணம் செய்வதற்கு உடல்நிலை ஒத்து வராது, முன்பதிவு செய்திருந்த, 'பிசினஸ்' வகுப்பில் தான், எனக்கு இருக்கை வேண்டும் என கேட்டேன். இருக்கைகள் முழுவதும் நிரம்பி விட்டன. நீங்கள், இதே வகுப்பில் பயணம் செய்யுங்கள். மீதி கட்டணம் உங்களுக்கு திரும்ப தரப்படும் என விமான பணியாளர்கள் தெரிவித்தனர்.
விமானம் புறப்பட தயாராக இருந்ததால் மீண்டும் கீழே இறங்குவது சிரமம்; இதனால், மிகவும் சிரமப்பட்டு பயணம் செய்தேன். மன உளைச்சலுக்கு ஆளானேன். உடல்நலமும் பாதிக்கப்பட்டது. எனக்கு உரிய இருக்கை வழங்காத விமான நிறுவனம், டிக்கெட் கட்டணமான ரூ.2.5 லட்சத்துடன் ரூ. 95 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
2 எக்கானமி வகுப்பு டிக்கெட்டுகள் மற்றும் இழப்பீடு வவுச்சரை அவர் ஏற்றுக் கொண்டார் என்று விமான நிறுவனம் நீதிமன்றத்தில் தெரிவித்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் டிக்கெட் பணத்துடன், ரூ.20 லட்சம் இழப்பீடை கோயன்காவுக்கு வழங்குமாறு லுப்தான்சாவுக்கு உத்தரவிட்டுள்ளது.
-
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications