ஜெ., விரைவில் குணமடைய அருண் ஜெட்லி, அமித் ஷா வாழ்த்து
சென்னை: அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில் நலமடைய வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியும், பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவும் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதியன்று இரவில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, உடல்நலக் குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை விரைவில் குணமடைய வேண்டும் என தேசிய கட்சிகள் உள்பட பல்வேறு அரசியல் கட்சியினரும் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். மேலும், பலர் மருத்துவமனைக்கு நேரடியாகச் சென்று முதல்வரின் உடல் நிலை குறித்து விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே, அப்பல்லோ மருத்துவமனைக்கு இன்று நேரில் சென்ற பாஜக தேசிய தலைவர் அமித்ஷா மற்றும் நிதியமைச்சர் அருண் ஜெட்லி ஆகியோர் முதல்வரின் உடல்நிலை குறித்து விசாரித்தனர். மருத்துவர்கள், தமிழக மூத்த அமைச்சர்களிடம் பேசிய அவர்கள், மருத்துவமனையை விட்டு வெளியே வந்து செய்தியாளர்களை சந்திக்காமலேயே சென்று விட்டனர்.
ஜெட்லி வாழ்த்து
இந்நிலையில், அப்பல்லோ மருத்துவமனைக்கு தான் சென்றதாகவும், தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைய தான் வாழ்த்துவதாகவும் அருண் ஜெட்லி தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Visited Apollo hospital Chennai today. I wish J Jayalalithaa Ji, Chief Minister of Tamil Nadu a speedy recovery.
— Arun Jaitley (@arunjaitley) October 12, 2016
அமித் ஷா வாழ்த்து
முதல்வர் ஜெயலலிதா பூரணமாக குணமடைய பிரார்த்திக்கிறேன் என பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார். அப்பல்லோ மருத்துவமனைக்குச் தான் சென்றதாகவும், ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டும் என்றும் அமித் ஷா தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Visited Apollo Hospital in Chennai to enquire about the health of Tamil Nadu CM J Jayalalithaa Ji. I wish and pray for her speedy recovery.
— Amit Shah (@AmitShah) October 12, 2016